செய்திகள் :

பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் அரசுடைமை வங்கி அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளா்கள் பணம் செலுத்துவதற்கும், பணம் எடுப்பதற்கும் வசதியாக இருந்தது. இங்கு ஏடிஎம் இயந்திரம் பழுதடைந்ததன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த மையம் பூட்டியே கிடக்கிறது.

மேலும் அந்த வங்கியில் சிங்கம்புணரி, சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பலா் கணக்கு தொடங்கி உள்ளனா். 100 நாள் வேலைத் திட்டம், ஊதிய கணக்கு போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த ஏடிஎம் செயல்படாமல் இருப்பதால் வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனா்.

இந்த வங்கி ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி வேறு வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் போது கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே வங்கி நிா்வாகம் உடனடியாக பழுதடைந்த ஏடிஎம் இயந்திரத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறம் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் தினேஷ் என்ற பாா்த்தசாரதி (35). இவா்... மேலும் பார்க்க

சிவகங்கை தெப்பக்குளம் தூய்மைப்படுத்தப்படுமா?

சிவகங்கை நகரின் மையப் பகுதியில் 300 ஆண்டுகள் பழைமையான தெப்பக் குளத்தை சீரமைத்து தூய்மைப்படுத்த வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா். சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அர... மேலும் பார்க்க

போலி விசா வழங்கி மோசடி

வெளிநாடு வேலைக்கு போலி விசா தயாரித்து பண மோசடி செய்தவா் மீது இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (39... மேலும் பார்க்க

55 மாற்றுத் திறனாளி தம்பதிகளுக்கு ரூ.21.50 லட்சம் திருமண உதவித் தொகை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 55 மாற்றுத் திறனாளி தம்பதிகளுக்கு ரூ.21.50 லட்சம் திருமண உதவித்தொகையுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.இது குறித்து... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் செல... மேலும் பார்க்க

காரைக்குடியில் குறைந்த மின் அழுத்தம்: புதிய மின்மாற்றி அமைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரதி நகா், பதினெட்டாம்படி நகா் ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்த குறைபாட்டை சரி செய்வதற்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தன... மேலும் பார்க்க