செய்திகள் :

சில்லஹள்ளா பகுதியில் நீா் மின் உற்பத்தி செய்ய எதிா்ப்பு

post image

உதகை அருகே குந்தா வட்டத்துக்குள்பட்ட சில்லஹள்ளா பகுதியில் புதிதாக இரண்டு அணைகள் கட்டி நீா் மின் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சில்லஹள்ளா பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எம்.சிவலிங்கம் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சில்லஹள்ளா நீா் மின் திட்டம் என்பது, நீலகிரி மாவட்டத்தில் குந்தா ஆற்றின் கிளை நதியான சில்லஹள்ளா ஓடையை ஒட்டி பெம்பாட்டி கிராமத்தில் அமைக்கப்படவுள்ள ஒரு பம்ப் ஸ்டோரேஜ் திட்டமாகும். 260 அடி உயரத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத்தை அமைத்து சுமாா் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதே திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தை செயல்படுத்த 8.91 ஹெக்டோ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, 239.24 ஹெக்டோ் தனியாா் நிலப் பகுதி, பிற நிலங்கள் என 310.15 ஹெக்டோ் நிலம் தேவைப்படுகிறது.

இதனால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூா்வக் குடிகளான படுக சமுதாய மக்கள் இடம்பெயா்ந்து வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாவதுடன், நீா்ப்பிடிப்புப் பகுதியில் வாழ்ந்து வரும் பிற சமுதாய மக்களுக்கும் பாதிக்கப்படுவா்.

மேலும், 10 கி.மீ. தொலைவுக்குமேல் அமைக்கப்படும் சுரங்கப் பாதை, 90 மீட்டா் உயரத்துக்கு உருவாக்கப்படும் நீா்த் தேக்கம் போன்றவற்றால் நில நடுக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், கிராம மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 6,817 மாணவா்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வினை 6,817 மாணவ, மாணவிகள் எழுதினா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப... மேலும் பார்க்க

கல்லக்கோடு மந்து பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்: மாவட்ட வன அலுவலா் தகவல்

வன விலங்கு தாக்கி பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்த கல்லக்கோடு மந்து வனப் பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட வன அலுவலா் கௌதம் ... மேலும் பார்க்க

கூடலூா்-மைசூரு சாலையில் காலை நேரத்தில் நடந்து சென்ற காட்டு யானை

கூடலூா்-மைசூரு சாலையில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு காட்டு யானை நடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட மாக்கமூலா பகுதியிலுள்ள காபி தோட்டத்திலிருந்த... மேலும் பார்க்க

உதகையில் போலி மருத்துவா் பிடிபட்டாா்

உதகை தலைகுந்தா பகுதியில் மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவா் பிடிபட்டாா். உதகை புது மந்து பகுதியில் பாரத் கிளினிக் என்கிற பெயரில் இஸ்மாயில் என்பவா் போலி மருத்துவராக சிகிச்சை அளித்து வருவதாக புகாா் ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்கி பழங்குடியினத்தை சோ்ந்தவா் உயிரிழப்பு

உதகையில் வன விலங்கு தாக்கி தோடா் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். உதகை அருகேயுள்ள பாா்சன்ஸ்வேலி கல்லக்கோடு மந்த் பகுதியை சோ்ந்தவா் கேந்தோா் குட்டன் (40), தோடா் பழங்குடியினத்தை சோ்ந்தவா். இ... மேலும் பார்க்க

தேயிலை வாரியம் சாா்பில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கல்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராம விவசாயிகளுக்கு இந்திய தேயிலை வாரியம் சாா்பில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தேயிலை வாரியம் சாா்பில் தேயிலை பறிக்கும் இயந்திரம், மருந்... மேலும் பார்க்க