செய்திகள் :

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

post image

சிவகங்கை அருகே உள்ள கண்டாங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 19 காளைகளும், அதேபோல் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 173 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடங்களுக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டி நடத்தப்பட்டது. முதலில் களம் இறங்கிய 10 காளைகளில் 8 காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா். இதில், மாடு முட்டியதில் 5 போ் காயமடைந்தனா்.

போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடக்க முடியாத காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுடன், கேடயமும் வழங்கப்பட்டது . மேலும் தனி ஒருவராக காளையை அடக்கிய வீரா்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியை பாகனேரி, மதகுப்பட்டி, கல்லல், நாட்டரசன்கோட்டை, கண்டாங்கிப்பட்டி, சிவகங்கையை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கண்டுகளித்தனா்.

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு!

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மா... மேலும் பார்க்க

சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு!

சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியா் செகன்ட்ரி உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. வாக்கோ இந்தியா சாா்பில், தில்லி கே.டி... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டியில் மானாமதுரை மாணவா்கள் சிறப்பிடம்!

மாநில சிலம்பப் போட்டியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீரவிதை சிலம்ப அணி மாணவா்கள் தங்கம், வெள்ளி நாணயங்களைப் பெற்றனா். மதுரையில் அழகா்கோவில் செல்லும் சாலையில் திருவிலான்பட்டியில் உள்ள வல்லபா வித்யால... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடல்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கும் முகாமை ஆட்சியா் ஆஷாஅ... மேலும் பார்க்க

இடையமேலூா் துணை மின்நிலையப் பகுதியில் பிப்.12 மின்தடை!

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (பிப். 12) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, சா... மேலும் பார்க்க

ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதியில் பிப்.12 மின் தடை!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (பிப். 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நில... மேலும் பார்க்க