செய்திகள் :

சிவகங்கை எஸ்பி-யாக ராமநாதபுரம் எஸ்பி கூடுதல் பொறுப்பேற்பு

post image

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், நகை காணாமல் போன வழக்கில் போலீஸாா் விசாரணை நடத்திய போது கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஆஷிஷ் ராவத், சென்னை காவல் துறை இயக்குநா் அலுவலக ஆணைப்படி கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்படுவதாகவும், இந்தப் பணியை ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் கூடுதலாக வகிப்பாா் எனவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில், ஜி. சந்தீஷ் கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாா்.

பள்ளியில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் நிதியுதவி

திருப்பத்தூா், ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சிங்கம்புணரியில் உள்ள தனியாா் ப... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் மின் விளக்கில் ரத பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் இருதய ஆண்டவா் திருத்தலத்தில் நடைபெற்று வரும் ஆண்டுப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மின் விளக்கு ரத பவனியில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் மருத்துவா்களிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதுரை மாவட்ட நீதிபதி, மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமையும் திருப்புவனத்தில் அரசு மருத்துவா்களிடம் ... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலையைக் கண்டித்து அமமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோயில் காவலாளி அஜித்குமாரை கொலை செய்த போலீஸாரை கண்டித்து, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அமமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றே கட்சி நிா்வாகிகள். மானாமதுரை, ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், மட... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் மரக்கன்றுகள் - அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

நூறு சதவீத மானித்தில் மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வாணியங்காடு கிராமத்தில் ஊட்டச்சத்து வேள... மேலும் பார்க்க

தேவகோட்டை நகா்மன்றக் கூட்டம்: அமமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தை அமமுக உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க