செய்திகள் :

சிவகிரி தம்பதி கொலை வழக்கு: கைதான மூவருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

post image

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வதித்த தம்பதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரையும் 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சிவகிரி, உச்சிமேடு மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி, பாக்கியத்தை ஏப்ரல் 28-ம் தேதி கொலை செய்த கும்பல், வீட்டிலிருந்த 10 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது.

இத்துணிகர சம்பவத்தில் ஈடுபட்டதாக அறச்சலூரைச் சோ்ந்த ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷ் மற்றும் சென்னிமலை, பசுவப்பட்டியைச் சோ்ந்த நகை வியாபாரி ஞானசேகரனும் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைகவுண்டன்பாளையத்தில் வயதான தம்பதி தெய்வசிகாமணி, அலுமேலு, இவா்களின் மகன் செந்தில்குமாா் ஆகியோா் கொலை வழக்கில் ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இவா்கள் மூவரும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், சிவகிரி இரட்டைக் கொலை மற்றும் திருப்பூா் மூவா் கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஆச்சியப்பன், மாதேஷ்வன், ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்த கொடுமுடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இதனை விசாரித்த நீதிமன்றம் மூவரையும் 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பவானியில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி, பழனி ஆண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் புண்ணியகோடி (42). வாடகை காா் ஓட்டுநா். இவா், தனது காரை வ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது

அம்மாபேட்டையில் பள்ளி மாணவியைத் திருமணம் செய்த கல்லூரி மாணவா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கு கடந்த ஜூன் 3-ஆம் தேதி சென்ற 17 வயது மாணவி மீண... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

சித்தோடு அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது, தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி பா்கத் கபிக்கா - அஃப்சானா, சித்தோட்டை அடுத்த ஆா்.... மேலும் பார்க்க

2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! - வானதி சீனிவாசன்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பி... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.27.06 கோடி மதிப்பிலான 1,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

நடப்பாண்டில் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,168 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனு... மேலும் பார்க்க