செய்திகள் :

சி.பி.எம் ஸ்தாபகர்; தொழிலாளர்களின் தோழன்... கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

post image

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று மாலை 3.20 மணியளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் இன்று இரவு 9 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொது அஞ்சலிக்காக வைக்கப்படும். நாளை காலை திருவனந்தபுரத்தில் உள்ள தர்பார் ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்படும். நாளை மதியம் அவரது உடல் ஆலப்புழாவுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

சி.பி.எம் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதான்ந்தன் காலமானார்

கேரள மாநிலம், ஆலப்புழா வெந்தலத்தறா வீட்டில் சங்கரன் - அக்காம்மாவின் மகனாக 1923-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி பிறந்தார். வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு 4 வயது இருக்கும்போது அவரது அம்மா மரணமடைந்தார். அவருக்கு 11 வயது ஆனபோது தந்தை காலமானார். ஆதரவற்ற நிலையும், வறுமையும் துரத்தியபோதும், படிப்பை விடாமல் தொடர்ந்தார் வி.எஸ்.அச்சுதானந்தன். சாப்பிட ஒருவேளை உணவுகூட கிடைக்காத நிலையில் சாதி பாகுபாடு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வி.எஸ்.அச்சுதானந்தனை கிண்டலடித்த சக சிறுவர்களை தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை கழற்றி அடித்து விரட்டினார்.

வி.எஸ்.அச்சுதானந்தன்

தனது 15-ம் வயதில் ஆஸ்பின்வால் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு தொழிலாளர்களிடம் அதிக வேலை வாங்கிவிட்டு குறைந்த சம்பளம் கொடுக்கும் முதலாளிகளை எதிர்த்தார். வேலைக்கு தகுந்த ஊதியம் கேட்டு போராடினார். ஓராண்டிலேயே தொழிலாளர்களின் தோழனாக மாறினார். பல ஆண்டுகளாக கூலி கேட்டு முதலாளிகளிடம் கெஞ்சிக்கொண்டிருந்த  தொழிலாளர்களை இணைத்து போராடினார். 1964-ல் சி.பி.ஐ கட்சியில் இருந்து பிரிந்து சி.பி.எம் தொடங்கிய 32 பேரில் வி.எஸ்.அச்சுதானந்தனும் ஒருவர். 2006 முதல் 2011-ம் ஆண்டுவரை கேரள முதல்வராக இருந்தார். 2020-ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார். வி.எஸ்.அச்சுதானந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுகவினர் சின்ன தலைவலின்னாலும் தனியார் ஆஸ்பத்திரிக்கு போறாங்க! - தவெக அருண்ராஜ் விமர்சனம்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, திமுகவைப் ... மேலும் பார்க்க

'அதிமுக தலைமை வலுவிழந்துவிட்டது; தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர்!'- ஆதவ்வின் அதிமுக அட்டாக்!

தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, முதல் ... மேலும் பார்க்க

`3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!'- ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவம... மேலும் பார்க்க

Dharmasthala mass burial: சிதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட 100+ பெண்கள்? - அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண் சடலங்கள் புதைக்கட்டிருப்பதாக அந்தக் கோயில் முன்னாள் ஊழியர் கொடுத்துள்ள குற்றச்சாட்டு கர்நாடகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - பினராயி உருக்கம்!

கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடக்க உள்ளது. வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி... மேலும் பார்க்க

Monsoon session: நிதி, கல்வி, ஸ்போர்ட்ஸ்... மத்திய அரசு கொண்டு வரும் 15 மசோதாக்களின் முழு பட்டியல்!

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது.ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, கீழடி ஆய்வறிக்கை உள்ளிட... மேலும் பார்க்க