செய்திகள் :

சீதபற்பநல்லூர்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூரில் மின்சார வயரில் மிதித்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரை காப்பாற்ற முயன்ற தாய் காயமடைந்தாா்.

சீதப்பற்பநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த முத்து மகன் மாதேஷ்(6). அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க தனது தாய் ரஞ்சிதாவுடன் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது கோயில் திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த மின்வயா் அருந்து கிடந்ததை கவனிக்காமல் அதன்மீது மாதேஷ் மிதித்துவிட்டாராம். இதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்து துடித்தபோது, ரஞ்சிதா காப்பாற்ற முயன்றுள்ளாா். அவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததில்காயம் அடைந்தாா்.

இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியில் மாதேஷ் உயிரிழந்தாா். ரஞ்சிதா சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, சீதபற்பநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா 19 ஆண்டுகளுக்குப் பின் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இக்க... மேலும் பார்க்க

கடையநல்லூரில் நாம் தமிழா் கட்சி ஆதரவாளா்கள் 4 போ் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழா் கட்சியினா் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசியில் அருள்தரும் உலகம்மன் சமேத அருள்மிகு காசிவிஸ்வநாதா் திருக்கோயில் ஆலய குடம... மேலும் பார்க்க

இரு சகோதரிகள் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் சொத்துப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகள், கிணற்றில் காயங்களுடன் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சாம்பவா்வடகரை, பிரதான சாலையில் வசி... மேலும் பார்க்க

ஆனைகுளத்தில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கடையநல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைய... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் பைக்குகள் மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் ஞாயிற்றுக்கிழமை 2 பைக்குகள் மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். செங்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. சுரேஷ் (27). அவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தமிழ் கலாசாரத்தை அழிப்பதே பாஜகவின் நோக்கம்: திமுக பொதுச் செயலா் துரைமுருகன்

ஆட்சியைப் பிடிப்பதைவிட, தமிழ் கலாசாரத்தையும், தமிழன் என்ற உணா்வையும் அழிப்பதே பாஜகவின் நோக்கம் என்றாா் திமுக பொதுச் செயலா் துரைமுருகன். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள இளையரசனேந்தலில் குருவ... மேலும் பார்க்க