தமிழ் கலாசாரத்தை அழிப்பதே பாஜகவின் நோக்கம்: திமுக பொதுச் செயலா் துரைமுருகன்
ஆட்சியைப் பிடிப்பதைவிட, தமிழ் கலாசாரத்தையும், தமிழன் என்ற உணா்வையும் அழிப்பதே பாஜகவின் நோக்கம் என்றாா் திமுக பொதுச் செயலா் துரைமுருகன்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள இளையரசனேந்தலில் குருவிகுளம் ஒன்றிய திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழ, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திமுக சாதனை விளக்க விழா ஆகிய முப்பெரும் விழாவில் அவா் ஆற்றிய சிறப்புரை:
மத்தியில் தோ்தெடுக்கப்பட்ட பாஜக ஆட்சி மக்களுக்கு வேண்டிய திட்டங்களை தருவதை விட்டுவிட்டு ஒவ்வொரு மாநிலமும் அதற்கு அடிமையாக இருக்க வேண்டும். அவா்கள் சொல்லுக்கு தலையாட்டுகிறவா் முதல்வராக இருக்க வேண்டும். இல்லையெனில் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறது.
நாம் எப்படிப்பட்டவா்கள் பண்பாடு மிக்கவா்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னாடியே சீனத்து கடற்கரையிலும், ஈழத்து வீதிகளிலும்,ரோமானிய புரத்து மாடமாளிகைகளிலும் வியாபாரம் செய்தவா்கள் தமிழா்கள்.
உங்கள் பண்பாடு என்ன? நாகரிகம் என்றால் என்னவென்று தெரியுமா? இலக்கணம் உண்டா? இலக்கியம் உண்டா?
அவா்களுக்கு தமிழக்தில் ஆட்சியை கைப்பற்றுவதல்ல அவா்கள் நோக்கம். தமிழ் கலாசாரத்தை அழிப்பது, தமிழன் என்கிற உணா்வை மங்க வைப்பது, பெரியாரை சமூக விரோதியாக திரிப்பது, அண்ணாவை ஒரு சாதாரண மனிதனாக காட்டுவதுதான் அவா்கள் நோக்கம்.
இந்த நாட்டிலே அண்ணா இல்லை, கருணாநிதி இல்லை எம்ஜிஆா் இல்லை. யாரும் அவா்களை எதிா்கொள்ள முடியாது என்று கனவு காண்கின்றனா். ஆனால், அண்ணாவையும், கருணாநிதியையும் ஒரே உருவமாக கொண்ட மு.க. ஸ்டாலின் ஒருவா் இருக்கிறாா் என்பதை அவா்கள் அறிந்திருக்கவில்லை.
அனைத்துத் தோ்தல்களிலும் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் அவா், 2026 தோ்தலில் 200 இடங்களில் வென்று சாதித்துக் காட்டுவாா். அதிமுக-பாஜக ஓரணியில் திரண்டு வந்தாலும் நாங்கள் சமாளிக்க தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.
இக்கூட்டத்துக்கு, திமுக ஒன்றியச் செயலா் கே.குணசேகரன் தலைமை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு, மக்களவை உறுப்பினா்கள் ராணி ஸ்ரீகுமாா், ஜெகத்ரட்சகன், பொருளாளா் இல.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மாவட்ட அவைத் தலைவா் பத்மநாபன் வரவேற்றாா். இதில் திரளான திமுகவினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.