செய்திகள் :

சீனாவில் தலாய் லாமா குறித்த பாடல்... கைதான திபெத்திய கலைஞர்களின் நிலை என்ன?

post image

சீனாவில் தலாய் லாமாவை புகழ்ந்து பாடல் வெளியிட்ட திபெத்திய கலைஞர்கள் 2 பேர், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது நிலைக்குறித்து மிகப் பெரியளவில் கவலை எழுந்துள்ளது.

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான, தலாய் லாமா சமீபத்தில் தனது 90-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதை முன்னிட்டு, சீனாவில் வசித்து வரும் திபெத்திய கலைஞர்களான அசாங் (எ) ட்சுக்டே மற்றும் பெல்கியோங் ஆகியோர் அவரை புகழ்ந்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு திபெத்திய பாடகர் ஷெர்டன் என்பவர் பாடி வெளியிட்ட பாடலை, இவர்கள் மறு உருவாக்கம் செய்து சீன சமூக ஊடகமான குவாய்ஷோவில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

தலாய் லாமாவின் வாழ்க்கை, வரலாறு உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு அரிக் சோட்டன் என்பவர் எழுதிய அந்தப் பாடலின் வரிகள், திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீன அரசினால் சர்ச்சையான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் வெளியிட்ட பாடல் சீனாவில் மிகப் பெரியளவில் கவனம் பெற்றவுடன், இருவரும் இம்மாத (ஜூலை) துவக்கத்தில், சீன அதிகாரிகளால் எந்தவொரு சட்டப்பூர்வ அறிவுப்பும் இன்றி கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கைது செய்யப்பட்ட அசாங் சீனாவில் திபெத்திய கலாசாரம், மொழி, தெய்வீகம் ஆகியவற்றை தனது பாடல்கள் மூலம் மக்களிடையே பரப்பி வந்துள்ளார்.

மேலும், கடந்த 4 வாரங்களாக இருவரைப் பற்றியும் எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை என அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளதால், திபெத்திய ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவர்களது நிலைக் குறித்து கவலைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் படுகாயம்!

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.ரஷியா வந்துள்ள பெலாரஸ் அத... மேலும் பார்க்க

இந்தியா மீதான 25% வரி ஆக.7 முதல் அமல்: எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி?

‘இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்’ என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவிப்... மேலும் பார்க்க

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அதன் செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் (படம்) கூறியதாவது:இந... மேலும் பார்க்க

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டில் வாழும் இந்தியா்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.அயா்லாந்து தலைநகா் டப்லின் மற்றும் பி... மேலும் பார்க்க

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

உலக நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளின் விலைக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் மருந்துகளின் விலைகளைக் குறைக்குமாறு 17 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்... மேலும் பார்க்க