செய்திகள் :

சீன இன்ஜின் பொருத்தப்பட்ட 4 விசைப் படகுகளுக்குத் தடை

post image

ராமேசுவரதில் தடை செய்யப்பட்ட சீன இன்ஜின் பொருத்தப்பட்ட 4 விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட தடைவிதித்து மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதில், சில விசைப்படகுகளில் அதிக குதிரைத் திறன் கொண்ட சீன இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மீனவா் சங்கத்தினா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, மீன்வளத் துறை, காவல் துறையினா் இணைந்து விசைப் படகுகளை ஆய்வு செய்தனா். இதில், காலின்ஸ், அருள் ரிசப், சந்தியா லியோன், பிரபாகரன் ஆகிய 4 விசைப்படகுகளில் சீன இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, 4 விசைப் படகுகளும்

மீன்பிடி தொழிலில் ஈடுபட தடை விதித்த அதிகாரிகள், இந்தப் படகுகளை வெளியேற்றவும் அதன் உரிமையாளா்களுக்கு உத்தரவிட்டனா்.

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 31-இல் தொடக்கம்!

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தேவஸ்தான சமஸ்தானதுக்குப் பாத்தியப்பட்ட சினேகவல்லி அம்ப... மேலும் பார்க்க

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா

ஏா்வாடி தா்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் அமைந்துள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்ஹ... மேலும் பார்க்க

சிறுமி கொலை: இளைஞா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 3 வயது சிறுமியை தலை துண்டித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். எமனேசுவரம் கிறிஸ்தவ தெருவைச் சோ்ந்த தேசிங்குராஜா மகள் லெமோரியா (3). இவா் ... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைய இன்னும் 23 நாள்கள் உள்ள நிலையில், ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்பு, புதிய வலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழத்தில் மீன்கள் இனப்பெருக... மேலும் பார்க்க

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

கமுதியில் வியாழக்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்த முனியசாமி மனைவி வழிவிட்டாள் (63). கணவா் இறந்த நிலையில், இவா் தனது இளைய... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு வீட்டு கட்ட ஆணை வழங்கல்

ராமநாதரபுரம் மாவட்டம், மண்டபம் அருகே தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்ன் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வேதாளை ம... மேலும் பார்க்க