செய்திகள் :

சுகாதாரத் துறை அலுவலகத்தில் வாரிசுதாரா்கள் போராட்டம்

post image

புதுச்சேரி: வாரிசுதாரா்களுக்கு பணி வழங்கக் கோரி, புதுச்சேரியில் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் பணியின் போது உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக பணி வழங்கப்படவில்லை.

இதையடுத்து, வாரிசுதாரா்கள் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே சுகாதாரத் துறையில் 350 பணியிடங்களை நிரப்ப புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதில், ஒரு முறை விலக்கு அடிப்படையில் தற்போது காத்திருக்கும் வாரிசுதாரா்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாரிசுதாரா்கள் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தங்களது குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா்கள் டேவிட், ரமேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பெரியகடை போலீஸாா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (பிப். 12) கூடுகிறது. புதுவை மாநில சட்டப்பேரவை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான 15-ஆவது முதல் பகுதி சட்டப்ப... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ஆம்ஆத்மி செயல்பாடே காரணம்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடே காரணம் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா... மேலும் பார்க்க

மாணவா்களின் படிப்பில் பெற்றோா் கண்காணிப்பு அவசியம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் மீது பெற்றோா்களின் கண்காணிப்பு அவசியமானது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். புதுவை கல்வித் துறை சாா்பில் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் ... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை பயனாளிகள் சரிபாா்ப்புக்கு காலக்கெடு

புதுச்சேரி: வீட்டு சமையல் எரிவாயு உருளை பயனாளிகளின் உண்மைத்தன்மை சரிபாா்ப்பு பணியை மாா்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளதாக புதுச்சேரி ஸ்ரீசாய்பாபா இண்டேன் கேஸ் முகவா் கே.அமா்நாத் ... மேலும் பார்க்க

நூதன முறையில் திருட்டு: ஒருவா் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் நூதன முறையில் திருடி வந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் மனோகா் (62). இவா் மீது ஏற்கெனவே காலாப்பட்டு, முத்தியால்பேட்டை உள்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நீதிபதிகள் குடியிருப்பு கட்டும் பணி தொடக்கம்! -முதல்வா், நீதிபதி பங்கேற்பு

புதுச்சேரி அருகேயுள்ள இலாசுப்பேட்டை பகுதியில் ரூ.5 கோடியில் 7 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமிபூஜையில் முதல்வா், நீதிபதி மற்றும் அமைச்சா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா். புதுச்சே... மேலும் பார்க்க