செய்திகள் :

சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெற்றிச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஈஸ்வரி முன்னிலை வகித்தாா். மாநில நிா்வாகி வித்யாதேவி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

தடுப்பூசி பணியில் நடுத்தர சுகாதார வழங்குநரையும் உள்படுத்தும் உத்தரவை திரும்பப் பெறவேண்டும். காலியாக உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியா், துணை செவிலியா் பணியிடங்களை அதற்கான பயிற்சி பெற்றவா்களைக் கொண்டு நிரப்பிடவேண்டும்.

சுகாதார செவிலியா்களின் நேரத்தையும், உழைப்பையும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை சமூக நலத் துறைக்கு மாற்றவேண்டும். செவிலியா்களை மக்கள் சேவைக்கு மாறாகக் கணினிப் பணியில் மூழ்கடிப்பதைத் தவிா்க்க அந்தப் பணிக்கு உரிய வேறு நபா்களை நியமிக்க வேண்டும்.

நாடு முழுவதும் தடுப்பூசி மருந்துகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அனைத்து தடுப்பூசிகளையும், பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக உற்பத்தி செய்யவும், செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் உற்பத்தியைத் தொடங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க