செய்திகள் :

'சுடு நீரினை மட்டும் குடித்து வந்துள்ளார்' - Youtube பார்த்து டயட்; 18 வயது பெண் உயிரிழந்த பரிதாபம்!

post image

கேரள மாநிலம், கண்ணூர் அடுத்த கூத்துபரம்பாவைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா. 18 வயது இளம்பெண்ணான ஸ்ரீ நந்தா அதிக அளவில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது எடை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ நந்தா, உணவு உட்கொள்வதையே முற்றிலும் தவிர்த்துள்ளார்.

இவை குறித்து ஸ்ரீ நந்தாவின் குடும்பத்தினர், "கடந்த ஆறு மாதங்களாகவே அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதிலிருந்து மீள்வதற்காக யூ டியூப் பார்த்து உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்திருக்கிறார். இதை தனது குடும்பத்தினரிடம் மறைத்திருக்கிறார்.

பல மாதங்களாக தனது பெற்றோர் கொடுத்த உணவு ஏதும் உட்கொள்ளாமல் அந்த யூ டியூபில் சொன்னபடி சுடுநீரினை மட்டும் குடித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பலகட்ட உடல் பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவர்கள் ஸ்ரீநந்தாவின் பெற்றோர்களிடம் அவருக்கு போதுமான உணவு வழங்குமாறு அறிவுறுத்தினார்கள். மேலும் அவரை மனநல நிபுணரிடம் அழைத்துச்செல்லுமாறும் கூறினார்'' என்கிறார்கள். இரண்டு வாரத்திற்கு முன்பு ஸ்ரீநந்தாவின் உடல் மிகவும் பாதிக்கப்பட்டு ரத்தத்தின் சர்க்கரை அளவு மிகவும் குறைந்தது. மேலும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவரை அருகில் உள்ள தலச்சேரி கார்ப்பரேட்டிவ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

ஸ்ரீ நந்தாவை பரிசோதித்த மருத்துவர் நாகேஷ் மனோகர் பிரபு , "சரியாக 12 நாட்களுக்கு முன்னால் உடல்நிலை பிரச்னையால் அவசர சிகிச்சைப் பிரிவில் ஶ்ரீநந்தா அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதிக்கையில் அதிர்ந்து போனோம். ஏனெனில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே இருந்தது. மேலும் அவர் ஏற்கெனவே படுத்தப்படுக்கையாக இருந்ததும் தெரிய வந்தது. அவரது உடலில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை காற்று பொருத்தப்பட்டது. ஆனாலும் அவரது உடல் சீராகவில்லை'' என வருத்தமுடன் கூறியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Rabies : 50 நாளில் 77,540 நாய்க்கடி சம்பவங்கள்; 3 ரேபிஸ் மரணங்கள் - என்னதான் தீர்வு? | In-Depth

நாய்க்கடியும், அதனால் வருகிற ரேபிஸ் தொற்றும், அதன் தொடர்ச்சியான மரணங்களும் தமிழக அளவில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கோவையில் நாய்க்கடிக்காக சிகிச்சைப் பெற்றுகொண்டிருந்த புலம்... மேலும் பார்க்க

`59% இந்தியர்கள் 6 மணிநேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர்' - அதிர்ச்சி தரும் அறிக்கை!

இந்திய அளவிலான மக்களின் தூக்க முறைகள் பற்றிய கணக்கெடுப்பு, 59 விழுக்காடு மக்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர் என்றும், வார இறுதிகளில் இந்த விழுக்காடுபாதியாகக்குறைவதாகவும் தெரிவி... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோஷியல் மீடியாவை பார்த்து எடை குறைத்த மகள்: ஆரோக்கியமானதா, அனுமதிக்கலாமா?

Doctor Vikatan: என்னுடைய 13 வயது மகள் மிகவும் அதிக உடல் பருமனுடன் இருந்தாள். கடந்த சில நாள்களாக திடீரென சோஷியல் மீடியாவை பார்த்து அவளாகவே ஏதோ டயட்டை பின்பற்றுகிறாள். அந்த டயட்டை பின்பற்ற ஆரம்பித்த பிற... மேலும் பார்க்க

வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்து உயிரிழந்த தொழிலாளி

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமசந்தர் (வயது 28). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரை தெருநாய் கடித்துள்ளது. இதையடுத்து உடல்நலம் பாதிக... மேலும் பார்க்க

Doctor Vikatan: அதென்ன 'ஐ பிரஷர்..' பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா அது?

Doctor Vikatan: என்நண்பனுக்கு 55 வயதாகிறது. சமீபத்தில் கண்டெஸ்ட்டுக்கு போனபோது, மருத்துவர் அவனுக்குகண்களில் பிரஷர் அதிகமாக உள்ளதாகவும், அதைஇப்போதே பார்த்து சரிசெய்யாவிட்டால், பார்வையே பறிபோகலாம் என்று... மேலும் பார்க்க

Muskmelon: முலாம் பழம் குளிர்ச்சி தரும்; குடல் புழுக்களைக் கொல்லும்; அல்சரை குணப்படுத்தும்!

வெயில் காலத்தில் தர்பூசணிக்கு அடுத்து எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவது முலாம் பழங்களைத்தான். இதை நறுக்கியதும் நாசியைத் துளைக்கும் மணமும் பளீர் ஆரஞ்சு நிறமுமே ஈர்க்கும். முலாம் பழத்தின் சத்துக்கள், சிற... மேலும் பார்க்க