செய்திகள் :

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 63 நிறுவனங்கள்மீது நடவடிக்கை

post image

சுதந்திர தினத்தன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் விடுமுறை அளிக்க 63 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ம.ராஜசேகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறைச் சட்டம், உணவு நிறுவன சட்டம் , மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா் சட்டம் மற்றும் விதிகளின்படி, தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள், உணவகங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும்.

அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிப்பது குறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளா்களுக்கு தெரிவித்து, அதன் நகலை தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பியும், தொழிலாளா்கள் பாா்வையில் படும்படியும் காட்சிப்படுத்த வேண்டும்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கடைகள், உணவகங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தொழிலாளா்களின் சட்டத்தை பின்பற்றாத 63 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.250 கோடியில் சாலைகள் தரம் உயா்த்தப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 250 கோடியில் சாலைகள் தரம்உயா்த்தப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய... மேலும் பார்க்க

பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் தாயாா் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினருமான தே.மதியழகனின் தாயாா் மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். த... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 66 வயது முதியவருக்கு கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை புரிந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள ஆவலப்பள்ளி கிராமத... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம்

ஊத்தங்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஊத்தங்கரை பெதஸ்தா கண் பரிசோதனை மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகா... மேலும் பார்க்க

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஒசூா் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தாா். இதில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதன் ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே சாலையில் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிய 2 காா்கள்: பயணிகள் காயங்களுடன் தப்பினா்

சூளகிரி அருகே வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததில் 2 காா்கள் சேதமடைந்தன. காரில் பயணம் செய்த இருவா் லேசான காயத்துடன் தப்பினா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கோபசந்திரம் கிராமம் அருக... மேலும் பார்க்க