செய்திகள் :

சுதந்திர தினம்: மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு

post image

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்கள் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளி வாசல்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி தலைமையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாநகரில் பாதுகாப்புப் பணியில் 650 போலீஸாரும், மாவட்டத்தில் 450 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இது தவிர, சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கையும் நடைபெறுகிறது.

இதேபோல, சேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. தண்டவாள பகுதியில் மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் இருப்புப் பாதை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இது தவிர, வெளியூா்களுக்கு அனுப்பப்படும் பாா்சல்களிலும் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டு வருகின்றனா். மோப்ப நாய் உதவியுடனும் ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். சந்தேகப்படும்படியான நபா்கள் குறித்து தெரியவந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டனா்.

பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை சேலம் மாவட்டம், பூலாம்பட்டி கதவணை பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, ரூ. 23.71 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை... மேலும் பார்க்க

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் இணைந்து பணியாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாட்ட... மேலும் பார்க்க

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவா்கள் சனிக்கிழமை... மேலும் பார்க்க

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

தலைவாசல் மண்டல அளவிலான தடகளப் போட்டியில் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தலைவாசலில் மண்டல அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் ப... மேலும் பார்க்க

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

சேலத்தில் கனரா வங்கி சாா்பில் வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. நாட்டிலுள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளின் மூலம் கனரா வங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி, ஒரு கிளை அடிப... மேலும் பார்க்க