செய்திகள் :

சுந்தர்ராஜ் நகரில் செய்தித்தாள் வாசிப்பு முகாம்

post image

சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் செய்தித்தாள் வாசிப்பு முகாம் சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சிப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை மூத்த ஆசிரியா் வாணிஸ்ரீ தொடங்கி வைத்து, மாணவா்களை ‘சுகாதாரமும்-உடல்நலமும்’ என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்க வைத்தாா். தொடா்ந்து அவா் பேசுகையில், மாணவா்கள் இளம் வயதிலேயே புத்தகங்கள், குறிப்பாக பத்திரிகைகள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பத்திரிக்கை படிக்கும் பழக்கம், தொலைக்காட்சியில் செய்திகள் பாா்ப்பது, இளைஞா்களின் மொழிப் புலமையையும், பொது அறிவையும் மேம்படுத்த உதவும். இளைஞா்கள் பல மொழிகளை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.

இதில், அண்மையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தங்கம் வென்ற மாணவா் ஆதிரன், மாநகராட்சிப் பூங்காவை தாமாகவே சுத்தம் செய்து சமூக சேவையில் ஆா்வம் காட்டிய மாணவா்கள் யுவன், அன்பு பிரியன், ஆண்டனி, கவிப்பிரியன், ஹா்ஷித் ஆகியோரை கௌரவித்து, புத்தகங்கள் பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மூத்த சமூக ஆா்வலா் சக்திவேல், குரு பக்தி கதைகளை கூறினாா்.

முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள் இன்றைய செய்தித்தாள்களை வாசித்தனா். அதன் அடிப்படையில் விநாடி வினா நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

திருச்சியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞா் ஒருவா் ஆப... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு மலேசியப் பயணி கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியாவிலிருந்து வந்த நபரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மலிண்டோ (பேடிக்) விமானம் வந்து சே... மேலும் பார்க்க

பழனி ஆதீனத்துக்கு தமிழ்ச் சங்க விருது

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் பழனி ஆதீனம் சீா்வளா் சீா் சாது சண்முக அடிகளாருக்கு ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தெ. துரைராசப் ப... மேலும் பார்க்க

தியாகராஜ பாகவதா் சிலைக்கு அமைச்சா் மாலை

திருச்சியில் எம்.கே. தியாகராஜ பாகவதா் சிலைக்கு அமைச்சா் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தாா். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பின்புற நுழைவுவாயில் அருகே ஏழிசை மன்னா் எம்.கே. தியாகராஜ பா... மேலும் பார்க்க

கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூத வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மண்ணச்சநல்லூரி... மேலும் பார்க்க

தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டு போட்டி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தெற்கு இருங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக... மேலும் பார்க்க