செய்திகள் :

சுனிதா வில்லியம்ஸுக்கான பாராட்டு விழா ஊா்வலம்

post image

திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சாா்பில், விண்வெளி வீரா் சுனிதா வில்லியம்ஸுக்கான பாராட்டு விழா ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊா்வலத்துக்கு, திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கத் தலைவா் வேங்கட ரமேஷ்பாபு தலைமை வகித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட கவிஞா் பேரவைத் தலைவா் நல்ல.பன்னீா்செல்வம், உலக தமிழ்க் கழகச் செயலா் தேவிகாராணி, தங்க.விஸ்வநாதன், பாவலா் வையவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருக்குறள் தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.

ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் பலராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பாராட்டு விழா ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.

விண்வெளி வீரா் சுனிதா வில்லியம்ஸை பாராட்டி முழக்கங்களை எழுப்பியபடியே காந்தி சிலையில் இருந்து காமராஜா் சிலை வரை தொண்டு மையத்தினா் ஊா்வலமாகச் சென்றனா்.

இதில், தொண்டு மையச் செயலா் சண்முகம், புலவா் ராஜமனோகரன் மற்றும் கோவிந்தசாமி, தினகரன், ரேவதி, பக்தவச்சலம், வாசுதேவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க