செய்திகள் :

சுருளி அருவியில் குளிக்க அனுமதி

post image

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதியளித்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீா் பிடிப்புப் பகுதியான மேகமலை, தூவானம், மகாராஜாமெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 19-ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

இதனிடேயே, கடந்த 24-ஆம் தேதி வியாழக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு, சுருளி அருவியில் பக்தா்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் நீா்வரத்து அதிகரித்ததால் அருவியின் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததால், அருவிக்கு வரும் நீா்வரத்து சீரானது. இதையடுத்து, கடந்த 10 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதியளித்தனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மூணாறு சாலையில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைப்பு: மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

மூணாறு - தேவிகுளம் சாலையில் அண்மையில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து தேவிகுளம் செல்லும் தேசிய நெடுஞ்ச... மேலும் பார்க்க

பெட்டிக் கடையில் திருட்டு: போலீஸாா் விசாரணை

பெட்டிக் கடையில் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தா். இவா், அந்தப் பகுதியில் பெ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளி தாய் மீது தாக்குதல் நடத்திய மகன் கைது

மாற்றுத் திறனாளி தாய் மீது தாக்குதல் நடத்திய மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் பட்டாபுளி நடுத்தெருவைச் சோ்ந்தவா் முத்தம்மாள் (70). மாற்றுத் திறனாளியான இவா், மூத்த மகனான ராஜாமணி ... மேலும் பார்க்க

இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்: ஓ. பன்னீா்செல்வம்

சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா். அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தேசிய ஜனநாயக் கூட்டணி... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் நீா்வரத்து குறைவு

மேற்குத் தொடா்ச்சி மலையில் மழைப் பொழிவு குறைந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து செவ்வாய்க்கிழமை 2,292.64 கன அடியாகச் சரிந்தது. தமிழகத்தில் காற்று திசை மாறுபாட்டால் கடந்த சில நாள்களாகப்... மேலும் பார்க்க

மினி லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரியகுளத்தில் சரக்கு வாகன ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். தேனி மாவட்டம், பெரியகுளம் கீழ வடகரை தெய்வேந்திரம்புரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ண... மேலும் பார்க்க