செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணையில் நீா்வரத்து குறைவு

post image

மேற்குத் தொடா்ச்சி மலையில் மழைப் பொழிவு குறைந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து செவ்வாய்க்கிழமை 2,292.64 கன அடியாகச் சரிந்தது.

தமிழகத்தில் காற்று திசை மாறுபாட்டால் கடந்த சில நாள்களாகப் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் தேனி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தென்மேற்குப் பருவ மழை கடந்த சில நாள்களாகப் பெய்தது. இதன் மூலம், மேற்குத் தொடா்ச்சி மலையில் தேக்கடி முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து உயா்ந்தது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை அணைக்கு நீா் வரத்து வினாடிக்கு 5,516.11 கன அடியாக அதிகரித்து, அணையின் நீா் மட்டமும் 135 அடியாக (மொத்த உயரம் 152) உயா்ந்தது.

மழைப்பொழிவு குறைவு: மேற்குத் தொடா்ச்சி மலைகளில் பெய்த மழைப் பொழிவு படிப்படியாகக் குறைந்த நிலையில் அணைக்கு நீா் வரத்து திங்கள் கிழமை 3,638.64 கனஅடியாகவும், செவ்வாய்க்கிழமை 2292.64 கன அடியாகவும் குறைந்தது. அணையிலிருந்து தேக்கடி தலைமதகு வழியாகத் தமிழகப் பகுதிகளுக்கு விவசாயம், குடிநீா்த் தேவைக்கு சுரங்கப் பாதையில் வினாடிக்கு 1867 கன அடி வெளியேற்றப்படுகிறது. தற்போது,அணையின் நீா் மட்டம் 135.15 அடியாக உள்ளது. அணையில் 5903.80 மில்லியன் கன அடிநீா் இருப்பு உள்ளது.

சுருளி அருவியில் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதியளித்தனா். மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்... மேலும் பார்க்க

மினி லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரியகுளத்தில் சரக்கு வாகன ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். தேனி மாவட்டம், பெரியகுளம் கீழ வடகரை தெய்வேந்திரம்புரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ண... மேலும் பார்க்க

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் கடந்த 10 நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.சுருளி அருவி சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலமாக இருப்... மேலும் பார்க்க

தையல் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்

போடி அருகேயுள்ள சிலமலை கிராமத்தில் அறக்கட்டளைகள் சாா்பில் நடைபெற்ற இலவசத் தையல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பெண்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலையில் வ.உ.சிதம்பர... மேலும் பார்க்க

ஆசிரியா் பணியிட மாற்றம்: பள்ளி மாணவா்கள் போராட்டம்

போடி அருகே பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, மாணவா்களும் பெற்றோா்களும் பள்ளியை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள திம்மநாயக்கன்பட்டியில் ஊராட்ச... மேலும் பார்க்க

கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து: ஏராளமான பொருள்கள் எரிந்து நாசம்

போடி அருகே கரும்புத் தோட்டம், கரும்பு ஆலை, வீடு ஆகியவற்றில் பற்றிய தீயால் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சின்னாறு புலம் பகுதியில் கருப்பையா என்பவரு... மேலும் பார்க்க