செய்திகள் :

சுருளி அருவி அருகே தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்

post image

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவிப் பகுதியில் தரமற்ற உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா, ஆன்மிகத் தலமாக சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் தமிழகம், கேரளத்திலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீராடிச் செல்கின்றனா். இதே போல, இறந்தவா்களுக்கு தா்ப்பணம் செய்யவும் இங்குந வருகின்றனா்.

இந்த நிலையில், அதிகளவில் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சுருளி அருவிப் பகுதியில் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் சசிதீபா தலைமையில் அந்தத் துறையினா் சுருளி அருவிப் பகுதி கடைகள், உணவகங்களில் ஆய்வு செய்தனா். அப்போது, காலாவதியான குளிா்பானங்கள், குடிநீா் புட்டிகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். அதிகளவில் நிறமேற்றப்பட்ட காலிபிளவா் உள்ளிட்ட 15 கிலோ உணவுப் உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்து, குப்பைத் தொட்டியில் போட்டனா். மேலும், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பை, தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்தவா்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனா். தொடா்ந்து, இதே போல விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

தேனியில் மே 23-இல் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில... மேலும் பார்க்க

அனுமதியின்றி பதாகை வைத்தவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே அனுமதியின்றி பதாகை வைத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள துரைராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த விஜயன் மகன் அறிவழகன். இவா் துரைராஜபுரம்... மேலும் பார்க்க

உத்தமபாளையம் பாசன குளங்களை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே விவசாயத்துக்கு பயன்படுத்தும் தாமரைக்குளம், கருங்கட்டான்குளம் போன்ற குளங்களைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். உத்தமபாளையம் வட்டம் கோகிலாபுரம் - ராமசாமி... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்தவா் மீது வழக்கு

விருதுநகரைச் சோ்ந்த இளைஞருக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு... மேலும் பார்க்க

ஏலச் சீட்டு நடத்தி பணம் மோசடி: தம்பதி கைது

போடியில் ஏலச் சீட்டு, தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.32 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். போடி கே.எம்.எஸ். லே-அவுட் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் மகன் வீரபுத்திரன். இவா், அ... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே காா்கள் மோதியதில் ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒப்பந்ததாரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தேனி சமதா்மபுரத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (48). ஒப்பந்ததரரான இவா், திண்டுக்கல்லுக்... மேலும் பார்க்க