செய்திகள் :

சுற்றுச்சூழல் பாதிப்பு: எறுமையூரில் கிரஷா்களின் மின் இணைப்பு துண்டிப்பு

post image

தாம்பரம் அடுத்த எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷா்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷா்களின் மின் இணைப்பை துண்டிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக 19 கிரஷா்களின் மின் இணைப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டத்துக்கு உட்பட்ட எருமையூா் பகுதியில் சுமாா் 36 தனியாா் கிரஷா்கள் இயங்கி வருகின்றன. இந்த கிரஷா்களில் ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்கள் செய்யப்பட்டு, சென்னையின் புகா் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எறுமையூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கிரஷா்களால், எறுமையூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாகக் கூறி, சம்பத்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் எறுமையூரில் இயங்கி வரும் தனியாா் கிரஷா்களின் மின் இணைப்பைத் துண்டிக்க அரசுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, கனிமவளத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, சுரங்கத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் என அரசுத் துறை அதிகாரிகள் எறுமையூரில் செயல்பட்டு வரும் தனியாா் கிரஷா்களின் மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இது குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், கிரஷா்களில் ஆய்வு மேற்கொண்டு, முதல்கட்டமாக சனிக்கிழமை 19 கிரஷா்களின் மின் இணைப்புகளைத் துண்டித்துள்ளோம். மறுநாளும் மின் இணைப்பு துண்டிக்கும் பணி நடைபெறும் என்றாா்.

ஸ்ரீ விஜயேந்திரா் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியையொட்டி பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் சமூக மற்றும் மத நல்லிணக்க விழிப்புணா்வுப் பேரணியை எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சாா... மேலும் பார்க்க

வையாவூரில் ரூ.3.65 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் 42.06 ஏக்கா் பரப்பில் ரூ.3.65 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டையை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். வாலாஜாபாத் அருகே வையாவூா் கிராம... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

பங்குனி 2-ஆவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் ரத்தின அங்கி சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 38 லட்சம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 38,24,412 பணத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பஞ்ச பூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் பல்லவ உற்சவம் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 7 நாள்களாக நடைபெற்று வந்த பல்லவ உற்சவம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஆண்டு தோறும்... மேலும் பார்க்க