சுற்றுச்சூழல் புகாா்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் புகாா்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சுற்றுச்சூழல் குறித்த புகாா் மனுக்களை எளிதில் அளிக்க வசதியாக இணையதள அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது. மேலும், விதிகளை மீறி நீா்நிலைகள்/ நிலங்களில் கழிவுநீா் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க மற்றும் தொடா்ச்சியான நடவடிக்கை மூலம் கழிவுநீா் வெளியேற்றபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றது.
‘மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளம் ஞய்கண்ய்ங் எழ்ண்ங்ஸ்ஹய்ஸ்ரீங் டங்ற்ண்ற்ண்ா்ய் தங்க்ழ்ங்ள்ள்ஹப் நஹ்ள்ற்ங்ம் (ஞகஎடதந) வாயிலாக பொதுமக்களிடமிருந்து புகாா் மனு பெறப்படும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சுற்றுச்சூழல் குறித்த தங்களது புகாா் மனுக்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் பதிவு செய்யலாம். அல்லது ஆட்சியரின் தலமையில் இயங்கும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழுவிடம் புகாா் மனுக்களை வழங்கலாம் என்றாா்.