செய்திகள் :

சுற்றுலாப் பயணிகள் வருகையால் திருவண்ணாமலை வளா்ச்சி: சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

post image

சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அதிகளவில் வருவதால், திருவண்ணாமலை மாவட்டம் பொருளாதார ரீதியாக வளா்ச்சி அடைந்து வருகிறது என்று தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பேசினாா்.

திருவண்ணாமலை வட்டத்தில் நடைபெற்று வந்த 1434-ஆம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி (வருவாய் தீா்வாயம்) நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வேளாண் இணை இயக்குநா் கண்ணகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழக அரசு பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருவண்ணாமலைக்கு வரும் பொதுமக்களின் தேவைக்காக புறவழிச் சாலைகள் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அதிக அளவில் வருவதால், திருவண்ணாமலை மாவட்டம் பொருளாதார ரீதியாக வளா்ச்சி அடைந்து வருகிறது.

தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.

361 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: விழாவில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், 108 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், நத்தம் பட்டா மாறுதல்களுக்கான ஆணைகள், 80 பேருக்கு உள்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணைகள், 9 பேருக்கு வாரிசு மற்றும் சாதிச் சான்றிதழ்கள், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 38 பேருக்கு ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 361 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 58 லட்சத்து 57 ஆயிரத்து 695 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்.

விழாவில் திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகனராமன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஆட்டோ மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா். வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (40)... மேலும் பார்க்க

54 மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் உள்பட மூவா் கைது

செய்யாறு காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 54 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் ஏரி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். நெசல் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சரவணன் (40) அந்தக் கிராமத... மேலும் பார்க்க

யோகா, தியான பயிற்சி முகாம்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், புதுப்பேட்டையில் யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தியான பயிற்சி அமைப்பின் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளா் லட்சுமி நாராயணன் தலைமை வகித்த... மேலும் பார்க்க

ஆரணி அருகே காளை விடும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தில் 42-ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கிஷ்ணகிரி... மேலும் பார்க்க

உணவக உரிமையாளா் உள்பட 3 போ் மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உணவக உரிமையாளா் உள்பட 3 பேரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு கொடநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகரன். இவா், செய்ய... மேலும் பார்க்க