செய்திகள் :

சுவர், சுவிட்ச் அனைத்தும் 24 காரட் தங்கத்தில்! அரசு ஒப்பந்ததாரர் வீடு என்றால் சும்மாவா?

post image

இந்தியாவில் இருக்கும் மிகவும் வித்தியாசமான வீடுகள் மற்றும் பங்களாக்களை விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமானவர் பிரியம் சரஸ்வத்.

இவர் அண்மையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கட்டப்பட்டிருக்கும் 24 காரட் தங்க வீட்டை விடியோ எடுத்து வெளியிட்டிருந்தார். இப்போது யாரும் இந்த விடியோவை பார்க்க முடியாது. ஏனென்றால், பல்வேறு காரணங்களால் அந்த விடியோவை அவர் நீக்கிவிட்டிருக்கிறார்.

ஆனால், அவர் பதிவிட்ட வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் கண்களையும் விரியச் செய்திருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநில அரசு ஒப்பந்ததாரராக இருக்கும் அனூப் அகர்வாலின் வீடுதான் அது. வீட்டின் சுவர், சுவிட்ச் போர்டு கூட தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மின்னுவதெல்லாம் பொன் அல்ல என்று சொல்லும் பழமொழியை பொய்யாக்கி, அவர் வீடு முழுக்க தங்கம் மின்னிக்கொண்டிருக்கிறது.

நாற்காலிகள், விளக்குகள், பொம்மைகள் என அனைத்தும் தங்கத்தால் ஆனவை, அல்லது தங்கத் தகடால், தங்க முலாம் பூசப்பட்டவை. தண்ணீர் குழாய்கள் கூட தங்க முலாம் பூசப்பட்டிருக்கும் என்பதைத்தான் பலரும் அதிசயத்துடன் பார்த்துள்ளனர்.

இந்த வீட்டின் அலங்காரம் குறித்து அனூப் அகர்வால் கூறுகையில், சாலைகள் போடுகிறோம், மேம்பாலம் கட்டுகிறோம், அதனால் எனது நிலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்று விடியோவில் கூறியிருந்தார்.

இந்த விடியோ வைரலான நிலையில், பலரும், மோசமான விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர். காங்கிரஸ் கட்சியினர், இப்போது தெரிகிறதா ஏன் புதிதாகப் போடப்படும் சாலைகளும் மேம்பாலங்களும் விரிசல் விடுகிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த வீடு முழுக்க அரசுப் பணம் என்று மக்களும் கருத்திட்டிருக்கிறார்கள். இது பூதாகரமாக மாறிய நிலையில், விடியோவை அவர் நீக்கியிருக்கிறார்.

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். பாஜக கூட்டணி ஆட்சி ந... மேலும் பார்க்க

மும்பை அறக்கட்டளை புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க தீா்மானம்: எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் - கிரண் ரிஜிஜு

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறவுள்ளதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வ... மேலும் பார்க்க

கேரளம்: அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து பெண் உயிரிழப்பு - 3 போ் காயம்

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். சிறுமி உள்பட 3 போ் காயமடைந்தனா். கோட்டயம் அரசு மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது அமா்நாத் யாத்திரை

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை தொடங்கியது. பஹல்காம், பால்டால் அடிவார முகாம்களில் இருந்து முதல் கட்டமாக 5,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் யாத்திரையைத் தொடங்கினா். தெற... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரிக்குள் மாணவி பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணை கோரும் மனு மீது மேற்கு வங்க அரசு பதிலளிக்க உத்தரவு

கொல்கத்தா அரசு சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் முதலாம் ஆண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரும் மனு மீது பதிலளிக்க மேற்கு வங்க அரசுக்கு மாநில உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க