செய்திகள் :

சூப்பர் ஸ்டாரா? அஜித் அளித்த பதில்!

post image

நடிகர் அஜித் குமார் பத்ம பூஷண் விருது மற்றும் தன் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நேற்று முன்தினம் (ஏப். 28) தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார்.

நடிகர், கார் ரேஸர் என இரண்டு துறைகளில் சவாரி செய்யும் அஜித் பத்ம பூஷண் விருது பெற்றதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விருதைப் பெற்றதும் பிரபல ஆங்கில செய்தி சேனலுக்கு அஜித் நேர்காணல் அளித்தார்.

அதில் பேசிய அஜித், “இன்னும் என் மனதளவில் மிடில் கிளாஸ் ஆளாகவே இருப்பதால் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தது இந்த அனுபவங்களைப் பெற்றது எல்லாம் நம்ப முடியாததாகவே இருக்கிறது. விருதிற்காக இந்திய அரசிற்கு, பிரதமர், குடியரசுத் தலைவர், நண்பர்கள் மற்றும் என் குடும்பம் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த விருது அறிவிக்கப்பட்டபோது நெகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற விருதுகள் நாம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றன.

நான் ஒரு நடிகர். இதுவும் ஒரு வேலைதான். இதற்காக, நான் சம்பளமும் பெறுகிறேன். புகழும் செல்வமும் இதன் துணை பொருள்களாக அமைந்துவிடுகின்றன. சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. என்னை அஜித் அல்லது ஏகே என்று அழைப்பதை பரிந்துரைக்கிறேன். என் துறையில் 33 ஆண்டுகளாக விருப்பதுடன் பணியாற்றி வருகிறேன். என்னால் முடிந்த அளவிற்கு என் வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்கவே முயற்சித்து வருகிறேன்.

என் மனைவி ஷாலினி எனக்காக பல தியாகங்களைச் செய்திருக்கிறார். அவரும் பிரபலமானவர். நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால், பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டு என் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்துவிட்டார். என் கடினமான காலகட்டத்தில் நான் எடுத்த தவறான முடிவுகளிலும் எனக்கு உறுதுணையாக இருந்தார். என்னுடைய சாதனைகளில் ஷாலினிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. சொல்லப்போனால், இப்படியெல்லாம் என் வாழ்க்கை அமைந்தது கனவில் வாழ்வதுபோல் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஒளரங்கசீப்பை அறைவேன்: ரெட்ரோ விழாவில் விஜய் தேவரகொண்டா சர்ச்சைப் பேச்சு!

சசிகுமார், நானிக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா!

நடிகர் சூர்யா ரெட்ரோவுடன் வெளியாகும் மற்ற திரைப்படங்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ, நானியின் ஹிட் - 3, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, ரெய்டு - 2 ஆகிய திரைப்படங்கள் நாள... மேலும் பார்க்க

அழகர் கோவிலில் பிக் பாஸ் பவித்ரா ஜனனி! ரசிகர்கள் பகிர்ந்த விடியோ!

மதுரை அழகர் கோவிலில் பிக் பாஸ் புகழ் பவித்ரா ஜனனி சாமி தரிசனம் செய்தார். மேலும், அங்கிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை ரசிகர் ஒருவர் விடியோ எடுத்துப் பகிர்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் பிஎஸ்ஜி முன்னிலை, ஆர்செனல் தடுமாற்றம்!

சாம்பியன்ஸ் லீக்கின் முதல் கட்ட அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி முன்னிலை வகிக்கிறது.ஆர்செனல் அணியுடனான முதல் கட்ட அரையிறுதியில் பாரிஸ் ஜெயண்ட் ஜெர்மெயின் (பிஎஸ்ஜி) 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தப் போட... மேலும் பார்க்க

பணத்தில் கிடைக்காத மகிழ்ச்சி... சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி பகிர்ந்த விடியோ!

உண்மையான மகிழ்ச்சி எதில் கிடைக்கும் என்பது குறித்து சிறகடிக்க ஆசை தொடரின் நாயகி கோமதி பிரியா விடியோ வெளியிட்டுத் தெரிவித்துள்ளார். இதில், கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி, பயணம் செய்யும்போ... மேலும் பார்க்க

30 நாளில் படப்பிடிப்பை முடிந்த பிரம்மயுகம் இயக்குநர்!

நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார்.தொ... மேலும் பார்க்க

முழுக்க முழுக்க ஏஐ! கவனம் ஈர்க்கும் கன்னட திரைப்படம்!

முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தால் உருவான கன்னட திரைப்படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் வந்தபின் எல்லாத் துறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. கூட்டுழைப்பு அதிகம் தே... மேலும் பார்க்க