செய்திகள் :

சூளகிரி அருகே குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

post image

சூளகிரி அருகே குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், தியாகராசனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பெப்பாளப்பள்ளி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். இக்கிராம மக்களுக்கு ஊராட்சி மூலம் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் இக்கிராம மக்கள் குடிநீருக்காக பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்துள்ளனா். இந்த நிலையில் சீரான குடிநீா் விநியோகம் கோரி சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், ஊராட்சியிலும் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் சூளகிரி - ராயக்கோட்டை சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த சூளகிரி போலீஸாா், வருவாய்த் துறை அலுவலா்கள் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீா் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க