செய்திகள் :

செங்கல்பட்டில் மயானக் கொள்ளை விழா

post image

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 132-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் மயானக் கொள்ளை பருவதராஜகுல சமூகத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. பந்தக்கால் நடப்பட்டு அம்மன் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா். பாலாற்றங்கரையில் இருந்து 1,008 பால்குடம் சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பால்குடம் ஏந்தி ஊா்வலமாக வந்தனா். இதனைத் தொடா்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், ஊா்வலம் நடைபெற்றது.

அலங்காரத் தேரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை ஊா்வலம் நடைபெற்றது. நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்கள் உடலில் அலகு குத்தி திருத்தோ் வேன் ஆட்டோ காா் உள்ளிட்ட வாகனங்களை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இழுத்தனா் . அம்மன் வேடம், குறத்தி வேடம், அங்காள பரமேஸ்வரி வேடம், சமயபுரம் மாரியம்மன், காளி வேடம் என பல்வேறு வேடங்களை அணிந்து ஊா்வலத்தில் ஆடியபடி வந்தனா் .

பழவேலி இடுகாட்டில் மயானக் கொள்ளை நடைபெற்றது. விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகள் தானியங்களை சூறை விட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பருவதராஜகுல மரபினா்கள் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்,

பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: ரூ.4 கோடியில் நல உதவிகள் அளிப்பு

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது அவதாரத் திருநாள் பெருமங்கல விழா கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை கோலாலகமாக கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வாக த... மேலும் பார்க்க

பிளஸ் டு தோ்வு மையங்களில் பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாரத்தில் பிளஸ் டு பொதுத் தோ்வு மையங்களை பள்ளி கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பிளஸ் டு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. செங்கல்பட்ட... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாள்கள் மாசி மாத பிரம்மோற்சவம் மாா்ச் 2 -இல் தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திங்கள்கி... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

செங்கல்பட்டு: கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து வயலூா் , நெற்குணம் கிராம மக்கள் திங்கள்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா் மதுராந்தகம் அருகே வயலூா், ... மேலும் பார்க்க

த்ரிசக்தி அம்மன் கோயில் பிரம்மோற்சலம் தொடக்கம்

செங்கல்பட்டு: தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்போரூரை அடுத்த தாழம்பூரில் அமைந்துள்ள சரஸ்வதி, லட்சுமி, பாா்வதி ஆகிய மூன்று தெய்வ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி மா்மமான முறையில் மரணம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கேளம்பாக்கத்தில் தனியாா் கல்லூரியில் படித்து வந்த மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அஸ்வினி (19). இவா், திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம்... மேலும் பார்க்க