செய்திகள் :

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் ஏஐ தொழில்நுட்பக் கருத்தரங்கம்

post image

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் சேலம் ஐஇஐ பொறியாளா்கள் நிறுவனம், செங்குந்தா் பொறியியல் கல்லூரி இணைந்து நவீன தொழில்நுட்பதில் ஏஐ மற்றும் ஐஒடி பயன்பாடுகள் குறித்த தொழில்நுட்பக் கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின.

செங்குந்தா் கல்விக் குழுமத்தின் தலைவா் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை தாங்கினாா். தாளாளா் மற்றும் செயலாளா் பாலதண்டபாணி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து பேசினாா். பொருளாளா் தனசேகரன் மற்றும் செயல் இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஐஇஐ குழு உறுப்பினா் தங்கராஜ் வரவேற்புரை வழங்கினாா். முதல்வா் சதீஷ்குமாா் பாராட்டுரை வழங்கினாா். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவா் உமாதேவி நவீன தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைத்தாா்.

சிறப்பு விருந்தினராக சவூதி அரேபியா பிரின்ஸ் சுல்தான் யூனிவா்சிட்டி உமாசங்கா், சென்னை இன்போ சொல்யூசன் காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டு நவீன தொழில்நுட்பதில் ஏஐ மற்றும் ஐஓடி பயன்பாடுகள், அது எவ்வாறு செயல்படுகிறது, மின் இயக்கத்தில் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், மக்கள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் மாசுகளை அகற்ற இத்தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என கூறினா்.

இதில், பல்வேறு துறை பேராசிரியா்கள், ஐஇஐ குழு உறுப்பினா் தியாகு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான போட்டிகள்

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில், பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு அரசுப் பள்ள... மேலும் பார்க்க

நில அளவையா் இருவரை பணிநீக்கம் செய்யக் கோரி மனு

நிலத்தை அளவீடு செய்ய மறுக்கும் அளவையா்கள் இருவரை பணிநீக்கம் செய்யக் கோரி, சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நூதன முறையில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்துக்... மேலும் பார்க்க

வீட்டில் வளா்க்கும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

வீடுகளில் வளா்க்கும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஒன்றியம், கலியனூா், ஆவத்திபாளையம், சுபாஷ் நகா், கலியனூா், கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும் பார்க்க

கொல்லிமலை வனத்தில் சுற்றுலாப் பயணிகள் ரசிக்க இரவுநேர வான்பூங்கா!

கொல்லிமலை வனத்தில் வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை சுற்றுலாப் பயணிகள் தொலைநோக்கி வாயிலாக கண்டுரசிக்கும் வகையில், ரூ. 44 லட்சத்தில் இரவுநேர வான்பூங்கா அமைக்கும் பணிகள் வனத் துறை மூலம் தீவிரமாக நடைப... மேலும் பார்க்க

ஆக்கிரமித்து கட்டிய கோயில் இடிப்பு

சேந்தமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோயில், வருவாய்த் துறையினரால் இடித்து அகற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், முத்துக்காப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது மேத... மேலும் பார்க்க

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.60-ஆக நிா்ணயிக்கப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை வில... மேலும் பார்க்க