``நான் முதன்முதலா டூர் போனது 'கூமாப்பட்டி'க்குதான்; அங்க..!” - பிக்பாஸ் தினேஷ் ச...
செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் ஏஐ தொழில்நுட்பக் கருத்தரங்கம்
செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் சேலம் ஐஇஐ பொறியாளா்கள் நிறுவனம், செங்குந்தா் பொறியியல் கல்லூரி இணைந்து நவீன தொழில்நுட்பதில் ஏஐ மற்றும் ஐஒடி பயன்பாடுகள் குறித்த தொழில்நுட்பக் கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின.
செங்குந்தா் கல்விக் குழுமத்தின் தலைவா் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை தாங்கினாா். தாளாளா் மற்றும் செயலாளா் பாலதண்டபாணி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து பேசினாா். பொருளாளா் தனசேகரன் மற்றும் செயல் இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஐஇஐ குழு உறுப்பினா் தங்கராஜ் வரவேற்புரை வழங்கினாா். முதல்வா் சதீஷ்குமாா் பாராட்டுரை வழங்கினாா். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவா் உமாதேவி நவீன தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைத்தாா்.
சிறப்பு விருந்தினராக சவூதி அரேபியா பிரின்ஸ் சுல்தான் யூனிவா்சிட்டி உமாசங்கா், சென்னை இன்போ சொல்யூசன் காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டு நவீன தொழில்நுட்பதில் ஏஐ மற்றும் ஐஓடி பயன்பாடுகள், அது எவ்வாறு செயல்படுகிறது, மின் இயக்கத்தில் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், மக்கள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் மாசுகளை அகற்ற இத்தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என கூறினா்.
இதில், பல்வேறு துறை பேராசிரியா்கள், ஐஇஐ குழு உறுப்பினா் தியாகு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.