செந்துறை நூலகத்துக்கு போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கல்
அரியலூா் மாவட்டம், செந்துறையில் உள்ள கிளை நூலகத்துக்கு அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சாா்பில் போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
செந்துறை கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், தன்னிடம் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1973- ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் ரூ. 55 ஆயிரம் மதிப்பில் வழங்கிய போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களை மாவட்ட நூலகா் வேல்முருகனிடம் வழங்கினாா்.
மேலும், செந்துறை நூலகத்தின் முதல் கொடையாளராக அமைச்சா் சிவசங்கா் ரூ. 10,000 செலுத்தினாா். நிகழ்ச்சியில் வாசகா் வட்டத் தலைவா் மதுக்குமாா், பொருளாளா் மதியழகன் மற்றும் முன்னாள் மாணவா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.