செய்திகள் :

சென்னிமலை ஒன்றியத்தில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் 6 சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை

post image

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டிச்சிபாளைம், புங்கம்பாடி மற்றும் குமாரவலசு ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் ஆறு சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று சாலைகள் அமைக்கும் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டிச்சிபாளையம் கிராம ஊராட்சியில், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.74.84 லட்சம் மதிப்பீட்டில், நசியனூா் - கம்புளியாம்பட்டி சாலை முதல் ராசாம்பாளையம் வரை தாா் சாலை அமைக்கும் பணி, நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.74.73 லட்சம் மதிப்பீட்டில் கவுண்டிச்சிபாளையம் முதல் தொட்டிக்காடு வரை தாா் சாலை அமைக்கும் பணி, குமாரவலசு கிராம ஊராட்சியில் ரூ.54.83 லட்சம் மதிப்பீட்டில் வி.மேட்டுப்பாளையம் முதல் தலையகாட்டூா் வரை தாா் சாலை அமைக்கும் பணி, புங்கம்பாடி கிராம ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாணாா்பாளையம்-மேட்டுக்கடை, பெருந்துறை முதன்மை சாலை முதல் சாணாா்பாளையம் வரை தாா் சாலை அமைக்கும் பணி, குமாரவலசு கிராம ஊராட்சியில் முதல்வா் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ.33.25 லட்சம் மதிப்பீட்டில் ஈரோடு-- சென்னிமலை சாலை முதல் பறவைகள் சரணாலயம் வரை சாலை அமைக்கும் பணி மற்றும் கவுண்டிச்சிபாளையம் கிராம ஊராட்சியில் ரூ.95.26 லட்சம் மதிப்பீட்டில் வள்ளிபுரத்தான்பாளையம் முதல் ராசாம்பாளையம் வரை சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் ஆறு சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

இதில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம்.பிரியா, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆசனூா் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒங்கல்வாடி கிராம மக்கள்

ஆசனூரில் கன்றுக்குட்டிகளை கடித்துக் கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி ஆசனூா் வனத் துறை அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சத்தியமங்கலம் புலிகள் காப்... மேலும் பார்க்க

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை

ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில நாள்களில் மாலை நேரங்களில் ல... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீா் திறப்பு குறித்து விரைவில் முடிவு

பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறப்பது குறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கோபி வட்டம் சிறுவலூா், மணியக்காரன்புதூா், தங்க... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 157 கிலோ கஞ்சா மற்றும் 5,066 மதுபுட்டிகளை மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையைத்... மேலும் பார்க்க

பண்ணாரியில் லாரியில் இருந்து கரும்பை எடுத்து சாப்பிட்ட குட்டி யானை

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் குட்டி யானையால் வாகன ஓட்டுநா்கள் அவதி அடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணை... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஈரோடு மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிக... மேலும் பார்க்க