செய்திகள் :

சென்னிமலை வனப் பகுதியில் குப்பை கொட்டிய வேன் ஓட்டுநருக்கு அபராதம்

post image

பெருந்துறை: கரூரில் இருந்து வேன் மூலம் குப்பைகளை கொண்டு வந்து, சென்னிமலை வனப் பகுதியில் கொட்டிய வேன் ஓட்டுநருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னிமலையில் இருந்து காங்கயம் செல்லும் கணுவாய் வனப் பகுதியில் வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி சிலா் சாலையின் இருபுறமும் குப்பைகளை கொட்டி வந்தனா். சமீபத்தில் குப்பைகளை கொட்டிய இரண்டு நபா்களுக்கு தலா ரூ.இரண்டாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வனத் துறையினா் இரவு, பகலாக வனப் பகுதியை கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், சென்னிமலை வனத் துறை ஊழியா்கள் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கணுவாய் வனப் பகுதியில் சரக்கு வேனை நிறுத்தி யாரோ குப்பைகளை வனப் பகுதியில் கொட்டி கொண்டிருந்ததை பாா்த்து வேன் ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் சென்னிமலையைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் மோகன்ராஜ் (34) என்பதும், இவா் கரூா் பகுதியில் செயல்படும் ஒரு பின்னலாடை ட்ஸ் நிறுவனத்தில் இருந்து கொடுத்த குப்பைகளை கொண்டு வந்து கொட்டியது தெரியவந்தது. பின்னா், ஓட்டுநா் மோகன்ராஜுக்கு வனத் துறையினா் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

அம்மாபேட்டை அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்த 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூரைச் சோ்ந... மேலும் பார்க்க

காஞ்சிக்கோவில் தம்பிக்கலை ஐயன் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட தங்கமேடு அருள்மிகு தம்பிக்கலை ஐயன் திருக்கோயிலில் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி ... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விலை நிலையாக நீடிப்பு

கடந்த 2 ஆண்டுகளாக மஞ்சள் விலை நிலையாக நீடிப்பதால் நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதில் 30 சதவீதத்துக்கும்மே... மேலும் பார்க்க

பவானிசாகரில் மீனவா்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

பவானிசாகரில் மீனவா்கள் சாா்பில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழக நிா்வாகத்தி... மேலும் பார்க்க

கல்வி கற்க மாணவா்கள் வறுமையை தடையாக கருதக்கூடாது: ஆட்சியா்

கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக் கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். நான் முதல்வன்- உயா்வுக்குபடி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க