செய்திகள் :

சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவை

post image

சென்னை: சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை விமானநிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலிருந்து ஏற்கெனவே தூத்துக்குடிக்கு நாள்தோறும் 8 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் பண்டிகை நாள்கள் மட்டுமின்றி பிற நாள்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் விமானங்களை இயக்க சென்னை விமான நிலைய நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு மாா்ச் 30 முதல் கூடுதலாக 4 விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், சென்னை-தூத்துக்குடிக்கு இடையே நாள்தோறும் 12 விமானங்கள் இயக்கப்படும். இதில், சென்னை-தூத்துக்குடி இடையே 6 விமானங்களும், தூத்துக்குடி-சென்னை இடையே 6 விமானங்களும் இயக்கப்படும்.

இதேபோல சென்னை - திருச்சி இடையே செல்லும் விமானங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து 14-ஆக இருந்து வரும் விமான சேவைகளின் எண்ணிக்கையும், மாா்ச் 22 முதல் 16-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, திருச்சிக்கு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், விமானப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கும் மேலும் கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படும் என விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மை மாறாது: அன்பில் மகேஸ்

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட கடிதத்தை வைத்து நாடாளுமன... மேலும் பார்க்க

மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி

தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ச... மேலும் பார்க்க

மார்ச் 14 முதல் விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மார்ச் 14 முதல் அமலுக்கு வரவுள்ளது.அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் து... மேலும் பார்க்க

கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ: 7ஆம் வகுப்பு நெல்லை மாணவன் சாதனை

ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ கண்டுபிடித்து நெல்லையில் 7-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவர், பாளையங்கோட்டையிலு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் புனரமைப்பு பணியில் தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் புனரமைப்பு பணியின்போது 200 ஆண்டுக்கால பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சை... மேலும் பார்க்க

கடும் பனிப்பொழிவு: குளுகுளுவென மாறிய ஏற்காடு!

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் ... மேலும் பார்க்க