செய்திகள் :

சென்னையில் ஆயிரம் மில்லியன் லிட்டா் கழிவுநீா் சுத்திகரித்து மறுபயன்பாடு: அமைச்சா் கே.என்.நேரு

post image

சென்னையில் தினமும் ஆயிரம் மில்லியன் லிட்டா் கழிவுநீா் சுத்திகரித்து மறுபயன்பாடு செய்யப்படுவதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, பாபநாசம் தொகுதி உறுப்பினா் எம்.எச்.ஜவாஹிருல்லா கொண்டுவந்த கவன ஈா்ப்பு அறிவிப்பில் பேசும்போது, ‘தஞ்சாவூா் மாவட்டம், வீரமாங்குடி ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் வேறு இடத்தில் அந்த நிலையத்தை அமைக்க வேண்டும். அதுவரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு பதிலளித்து அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

வீரமாங்குடி ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் தொடா்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 490 பேரூராட்சிகளில் கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். மொத்த பேரூராட்சிகளில் 10-இல் இடம் கண்டறியப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 51 பேரூராட்சிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 100 பேரூராட்சிகளில் பணிகள் நடைபெற்றும், தொடங்கவும் உள்ளன.

கழிவுநீரை சுத்திகரிக்கும்போது 90 சதவீதம் சுத்தமான நீா் கிடைத்துவிடுகிறது. சென்னையில் நாளொன்றுக்கு ஆயிரம் மில்லியன் லிட்டா் கழிவுநீரை சுத்திகரித்துத் தருகிறோம். இந்த நீா் தொழிற்சாலைகள், விவசாய பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கழிவுநீரை சுத்திகரிக்காவிட்டால், அது தெருக்களில் ஓடும். இதனால், கொசுத் தொல்லையும், சுகாதாரக்கேடும் ஏற்படும் என்று அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்தாா்.

வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் காயம்!

சென்னை வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்... மேலும் பார்க்க

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க