செய்திகள் :

சென்னையில் சப்தமில்லாமல் தீவிரமடையும் டெங்கு! கொசுக்களுக்கு உதவ வேண்டாம்!!

post image

டெங்கு காய்ச்சல் பற்றி அண்மைக் காலமாக பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், சப்தமே இல்லாமல், சென்னையில் டெங்கு பரவிக்கொண்டிருக்கிறது.

வீடுகளைச் சுற்றிலும் கொசுக்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாக, மழை நீர் தேங்கும் வகையில், டயர்கள், உடைந்த பாட்டில்கள் போன்றவற்றை போட்டு வைக்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் வ வெறும் 380 பேருக்குத்தான் டெங்கு பாதித்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 520 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் முதலே பரவலாக அவ்வப்போது மழை பெய்து, சிறு சிறு இடங்களில் தேங்கும் மழை நீர் டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

வீடுகளில், கொசுக்களை விரட்ட எத்தனை உபாயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், படையெடுப்பது போல வீடுகளுக்குள் நுழைந்து விடுகின்றன.

இந்த நிலையில், சென்னை முழுவதும் கொசுக்களை ஒழிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டிய அவசியமும் உருவாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல், காலியிடங்களில் கொசு உருவாக வசதியாக இருந்த ஏராளமான குப்பைகளையும் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

சென்னையில் அதிகபட்சமாக, அடையாறு மண்டலத்தில் அதிக டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு 110 பேருக்கும், சோளிங்கநல்லூரில் 60 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டெங்கு பரவலில் அடையாறு முதலிடம் வகித்து வருவதையும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பலருக்கும் தெரியும், டெங்கு கொசுக்கள் சுத்தமான தண்ணீரில்தான் இனப்பெருக்கம் செய்யும். எனவே,குடிநீர் தொட்டிகள் மூடப்பட்டிருக்கிறதா, வீடுகளைச் சுற்றிலும் சிறு சிறு பாத்திரங்கள் அல்லது பள்ளங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்கிறதா என்பதை மக்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மறுபக்கம், கொசுக்களின் இனப்பெருக்கத்துக்கு பருவமழையும் வழி வகுத்திருப்பதால், சென்னை மாநகராட்சியும், சிறு சிறு பொருள்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது மக்களின் கடமையும் உள்ளது.

டெங்கு காய்ச்சல் ஆண்டு முழுக்க பரவினாலும் ஆகஸ்ட் - அக்டோபரில் அதிகரித்து, செப்டம்பர் - அக்டோபரில் உச்சம் தொடுவது வழக்கம். எனவே, டெங்கு காய்ச்சல் சூடுபிடிக்கும் மாதங்கள் வரவிருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Although there hasn't been much talk about dengue fever recently, it is spreading silently in Chennai.

இதையும் படிக்க.. 2006 குண்டுவெடிப்பு! உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு!!

ஜூலை 26-இல் பிரதமர் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ... மேலும் பார்க்க

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அற... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அ... மேலும் பார்க்க

ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகள்: இன்று 7.5 % ஒதுக்கீடு கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வ... மேலும் பார்க்க