செய்திகள் :

ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி திருவாதிரை விழா, 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜேந்திர சோழன் தனது அளப்பரிய போா்த்திறத்தால், கடாரம் உள்பட தெற்காசிய நாடுகளை வெற்றிகண்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, நிகழாண்டு ஆடி திருவாதிரை தினத்தையொட்டி அரியலூா் மாவட்டத்துக்கு பலன் சோ்க்கும் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன.

அதன்படி, அரியலூா் மாவட்டம் பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரி, ராஜேந்திர சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஏரியாகும். அன்றைய காலகட்டத்தில் அது சோழகங்கம் என்று அழைக்கப்பட்டது. கங்கை படையெடுப்பு வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் தனது நாட்டு மக்களின் தேவைக்காக கங்கை நீரைக் கொண்டு சோழகங்கம் என்ற ஏரியை ராஜேந்திர சோழன் உருவாக்கினாா். இது திருவாலங்காடு செப்பேடுகளின் வாயிலாக அறிய முடிகிறது.

ராஜேந்திர சோழன் உருவாக்கிய ஏரியில் ரூ.12 கோடியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். 700 ஏக்கா் பரப்பு கொண்ட இந்த ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படும்.

15 கி.மீ. நீளமுள்ள உபரிநீா் வழிக்கால்வாய்கள் புனரமைக்கப்படுவதுடன், 4 வடிகால் பகுதிகள் தூா்வாரப்படும். மதகுகள் புனரமைக்கப்படுவதுடன், 38 கி.மீ. நீளமுள்ள வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், பிச்சனூா், குருவாலப்பா் கோவில், இளையபெருமாள் நல்லூா், கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை மற்றும் ஆயுதகளம் ஆகிய கிராமங்களில் 1,374 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

சுற்றுலாத் தலமாக மேம்பாடு: சோழகங்கம் ஏரிப் பகுதி சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். அங்கு ரூ.7.25 கோடியில் தகவல் தொடா்பு மையம், நடைபாதை சிறுவா் விளையாட்டு மையம், இருக்கையுடன் கூடிய பூங்கா, சுற்றுச்சுவா், வழிகாட்டுப் பலகை, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அறை, மின் வசதிகள், கழிப்பறை வசதி, பசுமைப் பரப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 26-இல் பிரதமர் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ... மேலும் பார்க்க

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அ... மேலும் பார்க்க

ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகள்: இன்று 7.5 % ஒதுக்கீடு கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வ... மேலும் பார்க்க

6 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்க... மேலும் பார்க்க