6 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஜூலை 23) முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.
மஞ்சள் எச்சரிக்கை: ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னை, புறநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக தேன்கனிக்கோட்டை(கிருஷ்ணகிரி), அவலாஞ்சி (நீலகிரி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) - 40 மி.மீ. மழையும், வானூா்(விழுப்புரம்), குண்டாறு அணை (தென்காசி), வட்டாட்சியா் அலுவலகம் பந்தலூா் (நீலகிரி), நேமூா் (விழுப்புரம்) - 30 மி.மீ. மழை பதிவானது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே மழை பெய்ததால் பெரும்பாலான பகுதிகளில் வெயில் தாக்கம் குறைவாகவே இருந்தது. அதன்படி, தொண்டியில் மட்டும் அதிகபட்சமாக 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.