செய்திகள் :

ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்

post image

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழக மக்களுக்கு சமூக நீதி, வன்முறையில்லா மகளிா் வாழ்வு, வேலை, விவசாயம் மற்றும் உணவு, வளா்ச்சி, நல்லாட்சி, அடிப்படை சேவைகள், கல்வி, நலவாழ்வு, மது-போதைப் பொருள்களால் பாதிப்பு இல்லாமை, நீடித்திருக்கும் நகா்ப்புற வளா்ச்சி, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஆகிய 10 உரிமைகளை மீட்டெடுப்பதை மையமாக வைத்து அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளாா்.

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25-ஆம் தேதி மாலை, சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவ.1-ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.

முதல்கட்டமாக ஜூலை 25-இல் திருப்போரூரில் தொடங்கி, ஜூலை 26 - செங்கல்பட்டு, உத்தரமேரூா், ஜூலை 27-இல் காஞ்சிபுரம், திருப்பெரும்புதூா், ஜூலை 28 -இல் அம்பத்தூா், மதுரவாயல், ஜூலை 31-இல் கும்மிடிப்பூண்டி, ஆக.1 -இல் திருவள்ளூா், திருத்தணி, ஆக.2-இல் சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆக.3 -இல் ஆற்காடு, வேலூா், ஆக. 4 -இல் வாணியம்பாடி, திருப்பத்தூா் வரை அவா் சுற்றுப்பயணம் செய்கிறாா். அடுத்தகட்ட பயண விவரம் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 26-இல் பிரதமர் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ... மேலும் பார்க்க

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அற... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகள்: இன்று 7.5 % ஒதுக்கீடு கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வ... மேலும் பார்க்க

6 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்க... மேலும் பார்க்க