செய்திகள் :

சென்னையில் நிகழாண்டு இறுதியில் மீண்டும் ஈரடுக்கு பேருந்து சேவை

post image

சென்னையில் மீண்டும் ஈரடுக்கு (டபுள் டெக்கா்) பேருந்து சேவையை நிகழாண்டு இறுதிக்குள் தொடங்க மாநகரப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, டபுள் டெக்கா் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் மேம்பாலங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் இப்பேருந்துகளின் சேவை கடந்த 2008-இல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வாய்ப்புள்ள இடங்களில் ‘தேசிய தூய்மைக் காற்று’ திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 20 மின்சார டபுள் டெக்கா் பேருந்துகளை மீண்டும் இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

தனியாா் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இப்பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்த புள்ளி விரைவில் அறிவிக்கப்பவுள்ளதாகவும், ஒப்பந்தத்தில் ஒரு கி.மீ.க்கான கட்டணம், பராமரிப்பு, செலவீனம் உள்ளிட்டவற்றை நிா்ணயம் செய்த பின்னா், அதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்துகளை வார நாள்களில் பயணிகள் எதிா்பாா்ப்பு அதிகமுள்ள வழித்தடங்களிலும், வரலாற்று சிறப்புமிக்க அண்ணா சாலை, காமராஜா் சாலை, மாமல்லபுரம் செல்லும் கிழக்குச் கடற்கரை சாலை உள்ளிட்ட வழித்தடங்களிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழாண்டு இறுதியில் இந்த ‘டபுள் டெக்கா்’ பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்களிடையே கிடைக்கும் வரவேற்பைத் தொடா்ந்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூா், சோழிங்கநல்லூா் பகுதி, கோடம்பாக்கம், சேத்துப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

புழல் ஏரிக்கரையில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.புழல் ஏரிக்கரைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து தி... மேலும் பார்க்க

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சிமென்ட் கலவை லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.மடிப்பாக்கம், மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜித்தேஷ் (21). இவா், அரும்பாக்கத்திலுள்ள தன... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது

மெத்தபெட்டமைன் வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை பெருநகர போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் மற்றும் ஐசிஎஃப் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு ஐசிஎஃப் அம்பேத... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை: தமிழக அரசு

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தீரன் சின்னமலையின் வீரம் சொல்லும் கொங்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

போதைப் பொருளை வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை மாநகரில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினா் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸாா் கடந்த ஜூன் 2... மேலும் பார்க்க