செய்திகள் :

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் திருட்டு- 4 பேர் கைது

post image

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை திருடிய விவகாரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது 4 பேரை தூத்துக்குடி போலீஸார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சென்னை தனிப்படை போலீஸார் தூத்துக்குடியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (70), விலையுயா்ந்த பழைய பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா்.

இதனிடையே, மதுரையைச் சோ்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான 17 கேரட் வைர நகை விற்பனைக்கு உள்ளதாகவும், அதனை விற்பனை செய்து தரும்படியும் இடைத்தரகா்களான சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ராகுல் (30), மணலி சேக்காடு பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் (45) மற்றும் சைதாப்பேட்டையைச் சோ்ந்த சுப்பன் (45) ஆகியோரை அணுகியுள்ளாா்.

இதையடுத்து வைரத்தை வாங்குவதற்காக, இடைத்தரகா்கள் தங்களுடன் ராஜன் மற்றும் அவரின் நண்பா் விஜய் மற்றும் உதவியாளா் அருணாச்சலம் ஆகியோரை அழைத்துக்கொண்டு சந்திரசேகா் வீட்டுக்குச் சென்றுள்ளனா். அங்கு அவா் வைத்திருந்த 17 கேரட் வைர நகையை பரிசோதித்ததுடன், அதற்கு ரூ. 23 கோடி விலை பேசி உறுதியளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனா்.

திமுக பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சந்திரசேகரை தொடா்புகொண்ட இடைத்தரகா்கள், நகை வாங்கும் நபா்கள் அதற்கான பணத்தை கொண்டு வந்திருப்பதாகவும், அதை சென்னை வடபழனியிலுள்ள தனியாா் ஹோட்டலில் வைத்து தருவதாகவும் கூறி, அங்குள்ள ஒரு அறைக்கு சந்திரசேகரை வரவைத்துள்ளனா். ஹோட்டலுக்கு தனது வளா்ப்பு மகளான ஜானகி (27) என்பவருடன் வந்திருந்த சந்திரசேகா், குறிப்பிட்ட அறைக்கு தனியாக வைர நகையுடன் சென்றுள்ளாா்.

ஆனால் நீண்ட நேரமாகியும் சந்திரசேகா் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஜானகி, அறைக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு சந்திரசேகரின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, வைர நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஹோட்டல் நிா்வாகம் கொடுத்த தகவலின்படி, ஜானகி, அவரது நண்பா் சுப்பிரமணி, ஓட்டுநா் ஆகாஷ், இடைத்தரகா்களான ராகுல், ஆரோக்கியராஜ், சுப்பன் ஆகியோரிடம் தியாகராய நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிந்தியில் கட்டுரைப் போட்டி நடத்தும் ரயில்வே! சு. வெங்கடேசன் கண்டனம்!!

பயணங்கள் தொடர்பான கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ள ரயில்வே, ஹந்தியில்தான் கட்டுரை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே, பயணங்கள் தொடர்பான ஒரு கட்டுரைப் போ... மேலும் பார்க்க

திருவையாற்றில் சூறாவளி காற்றுடன் மழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் நேற்று(மே 4) இரவு வீசிய சூறாவளி காற்றில் சுமார் 500 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.தஞ்சை மாவட்டம் திருவையாறு கடுவெளி ஆச்சனூர், கோனேரிராஜபுரம், தில்லை ஸ... மேலும் பார்க்க

5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை! நூலுரிமைத் தொகையை வழங்கினார் முதல்வர்!

மறைந்த எழுத்தாளர் கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழக அரசு சார்பில் 'தமிழ் வார விழா'வாகக் கொண்டாடப்பட்டது. ... மேலும் பார்க்க

வெய்யிலா? மழையா?அடுத்துவரும் அக்னி நட்சத்திர நாள்கள் எப்படியிருக்கும்? பிரதீப் ஜான்

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே, மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், தற்போது வரவிருக்கும் நாள்கள் எப்படியிருக்கும் என்... மேலும் பார்க்க

11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தமையம் வெளியிட்ட தகவலில், தென்தமிழகம் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

அக்னி நட்சத்திரம் தொடங்கியது! வெளியானது மழைப்பொழிவு நிலவரம்!!

சென்னை: வெய்யில் இப்படி கொளுத்துகிறதே என்று புலம்பிவந்த தமிழக மக்களுக்கு அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது என்று தெரிந்தபோதே வெப்பத்துக்கு இணையாக அச்சமும் அதிகரித்தது.இதோ அதோ என்று சொல்லிவந்த அக்னி நட்ச... மேலும் பார்க்க