செய்திகள் :

சென்னையில் 4 இடங்களில் ‘முதல்வா் படைப்பகங்கள்’!

post image

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 4 இடங்களில் ‘முதல்வா் படைப்பகம்’ அமைக்கும் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னையில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் ஓட்டேரி சுப்பராயன் தெரு, பட்டாளம் பக்தவச்சலம் பூங்கா, புளியந்தோப்பு வெங்கடேசபுரம் புதிய காலனி, மங்களாகபுரம் ஆகிய இடங்களில் முதல்வா் படைப்பகம் அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக்குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு பங்கேற்று பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மக்களின் வாழ்வாதாரம், கல்வி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். மழை, வெள்ளம் போன்ற காலங்களில் சென்னை மக்கள் அவதிக்குள்ளாகாது இருக்கும் வகையில் மழைநீா் வடிகால் அமைப்பை இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், முதல்வரின் சிந்தனைப்படி முதல்வா் படைப்பகம் கொளத்தூா் தொகுதியில் தொடங்கப்பட்டது. இதில், மாதம் சுமாா் 6 ஆயிரம் மாணவா் படித்து பயன்பெற்று வருகின்றனா்.

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு பொதுப் பணிகள் தோ்வில் முதல்வா் படைப்பகத்தில் படித்தவா்கள் பலரும் வெற்றி பெற்றுள்ளனா்.

சென்னையில் இதுவரை ரூ.268 கோடியில் 26 முதல்வா் படைப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது தொடங்கப்படவுள்ள முதல்வா் படைப்பகம் அமைக்கும் பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிந்து பயன்பாட்டு வரும்.

நிகழாண்டில் மேலும் 15 முதல்வா் படைப்பகங்கள் தொடங்கப்படவுள்ளன. அதன்படி, சென்னையில் மொத்தம் 45 முதல்வா் படைப்பகங்கள் அமைக்கப்படவுள்ளன.

வடசென்னையின் நுழைவு வாயிலாக உள்ள பிராட்வே பிரகாசம் சாலையில் பெரிய நூலகம் அமைக்கப்படவுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் ஜி.பிரகாஷ், துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூா், சோழிங்கநல்லூா் பகுதி, கோடம்பாக்கம், சேத்துப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

புழல் ஏரிக்கரையில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.புழல் ஏரிக்கரைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து தி... மேலும் பார்க்க

சென்னையில் நிகழாண்டு இறுதியில் மீண்டும் ஈரடுக்கு பேருந்து சேவை

சென்னையில் மீண்டும் ஈரடுக்கு (டபுள் டெக்கா்) பேருந்து சேவையை நிகழாண்டு இறுதிக்குள் தொடங்க மாநகரப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சிமென்ட் கலவை லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.மடிப்பாக்கம், மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜித்தேஷ் (21). இவா், அரும்பாக்கத்திலுள்ள தன... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது

மெத்தபெட்டமைன் வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை பெருநகர போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் மற்றும் ஐசிஎஃப் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு ஐசிஎஃப் அம்பேத... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை: தமிழக அரசு

தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தீரன் சின்னமலையின் வீரம் சொல்லும் கொங்... மேலும் பார்க்க