செய்திகள் :

சென்னை ஐஐடி கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு

post image

சென்னை ஐஐடி-இல் ஆய்வுகள், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புத்தாக்க தொழில்முனைவு ஆதரவு நிறுவனமான பிலோனம் ரூ. 6.50 கோடி வரை நிதியை திரட்டியது.

புத்தாக்கங்களை வணிக ரீதியாக மாற்றுவதற்கு ஆதரிக்க (இன்குபேட்டர்) சென்னை ஐஐடி-இல் பிலோனம் என்கிற நிறுவனம் அமைக்கப்பட்டது.

பிலோனம், மேம்பட்ட தரவுத்தள முறையான பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு போன்றவை மூலம் சுகாதாரம், வாக்களிப்பு போன்ற துறைகளில் உணர்திறன் வாய்ந்த தொழில்களில் தரவு பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், மின்னணு பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பிலோனம் நிறுவனத்தில் முக்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர்.

இதற்கான நிகழ்வில் இந்த இன்குபேட்டர் பிலோனம்-ஐ நிறுவிய சென்னை ஐஐடி பேராசிரியர் பிரபு ராஜகோபால் பேசியது:

தென்னிந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அமைப்புகளுடன் இணைந்து உணர்திறன் வாய்ந்த உறுப்பு தான தரவுத்தளங்களை நிர்வகிக்க, தொலைதூரத் தேர்தல்களை நடத்த பிளாக்செயின் அடிப்படையில் "பிளாக்வோட்' மென்பொருளைப் பயன்படுத்தி புதிய பயன்பாட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

விபத்தில் சிக்கிய வியாபாரியிடம் ரூ. 1.11 கோடி தங்கக் கட்டிகள் திருட்டு: மூவா் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விபத்தில் சிக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு உதவி செய்வதைப்போல் நடித்து, ரூ.1.11 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருடியதாக 3 போ் கைது செய்தனா். எழும்பூா் நம்மாழ்வாா் தெ... மேலும் பார்க்க

பதவி உயர்வு முரண்பாடு: ஆய்வக நுட்பநர்கள் நூதன எதிர்ப்பு

பதவி உயர்வு வழங்குவதில் முரண்பட்ட நிலைப்பாட்டை பொது சுகாதாரத் துறை கடைப்பிடிப்பதாகக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர்கள் தமிழகம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) பணிய... மேலும் பார்க்க

நாளை ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏற்பாடு

ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை சாந்தோம் கடற்கரை பின்புறம் உள்ள நொச்சிக்குப்பம் க... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத் துறை எதிா்ப்பு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. முன்னாள் அமைச்சா் செந்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக நங்கநல்லூா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மா... மேலும் பார்க்க

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை (ஜூலை 23) நடைபெறும் 6 வாா்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதவரம் மண்டலம் 24-ஆவது வாா்டு புனித அந்தோணியாா் நகரில் தியா திருமண மண்டபம், தண்டை... மேலும் பார்க்க