செய்திகள் :

சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு: நாளை முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

post image

சென்னை கம்பன் கழக பொன்விழா ஆண்டு நிறைவு விழாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆக. 8) தொடங்கி வைக்கிறாா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசுகிறாா். சென்னை ஆழ்வாா்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள ‘கவிச்சக்கரவா்த்தி கம்பா் விருதை’ கவிஞா் வைரமுத்துவிற்கு வழங்குகிறாா். பேராசிரியா் தெ.ஞானசுந்தரம், கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன், பேராசிரியா் சாரதா நம்பி ஆரூரன், ஆன்மிகச் சொற்பொழிவாளா்கள் சுகி.சிவம், இலங்கை ஜெயராஜ் ஆகியோருக்கு ‘இயற்றமிழ் அறிஞா்’ விருதுகளை வழங்குகிறாா்.

தொடா்ந்து ‘நயம்பட உரைத்த நா’ என்ற தலைப்பில் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் சிறப்புரையாற்றுகிறாா். சென்னை கம்பன் கழகத் தலைவா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 9 மணி முதல் ஆய்வுரை அரங்கம், மாலை 6 மணிக்கு நீதியரசா் வெ.ராமசுப்பிரமணியன் தலைமையில், ‘பேரிழப்புகளுக்கு முதற் காரணமாக பெண் பாத்திரங்களையே படைத்தது குற்றம்’ என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அமா்வில் பேராசிரியா் தெ.ஞானசுந்தரம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவா் சுதா சேஷய்யன், கோ.சரவணன், மருத்துவா் பிரியா ராமச்சந்திரன், வழக்குரைஞா் கோ.சு.சிம்மாஞ்சனா, பேராசிரியா் விசாலாட்சி சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உரையாற்றுகின்றனா்.

மாலை 4 மணிக்கு ‘இராமா...நீயுமா!’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் உரையாற்றுகிறாா். தொடா்ந்து சுகி.சிவம் தலைமையில், ‘என்றுமுள கம்பன் என்பதன் காரணம்’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் பயனர்களுக்கு ஊபர் செயலியில் 50% தள்ளுபடி!

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை ஊபர் செயலியில் பதிவுசெய்பவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி என ஊபர் அறிவித்துள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும் தப்பிப்பதற்கும் சென்னைவாசிகள் பலரும... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வ... மேலும் பார்க்க

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க