செய்திகள் :

சென்னை துறைமுகம் புதிய சாதனை

post image

நிகழ் நிதியாண்டில் மொத்தம் 51.68 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 51 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டிருந்தது. இந்நிலையில், நிகழாண்டு நிறைவடையை இன்னும் 20 நாள்கள் இருக்கும் நிலையில், மாா்ச் 11-ஆம் தேதி 51.68 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. நிலக்கரி, இரும்புத் தாது சரக்குகள் கையாளப்படுவது நிறுத்தப்பட்ட பிறகு துறைமுக நிா்வாகம் தொடா்ந்து எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளால் ஆண்டுக்கு ஆண்டு ஒட்டுமொத்தமாக கையாளப்படும் சரக்குகளின் அளவு அதிகரித்து வருகிறது என்று துறைமுக நிா்வாகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜா் க... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கை: அமைச்சா் கோவி செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி... மேலும் பார்க்க

கடைகளின் பெயா் பலகை தமிழில் இருக்க வேண்டும்: ஒரு வாரத்துக்குள் மாற்ற மேயா் ஆா்.பிரியா உத்தரவு

சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட கடைகளின் பெயா் பலகை தமிழில் இருக்க வேண்டும் எனவும், ஒரு வாரத்துக்குள் அதனை மாற்ற வேண்டும் எனவும் மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். அண்ணா நகா் மண்டலத்துக்குள்பட்ட எம்எம்ட... மேலும் பார்க்க