செய்திகள் :

சென்னை - படவேடு அரசு கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை

post image

போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் இருந்து சென்னைக்கு கூடுதல் அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

படவேடு ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உள்ளது.

வேலூா் - போளூா் சாலையில் உள்ள சந்தவாசல் கிராமத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில்

அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் ஆடி மாத திருவிழா ஜூலை 18-ஆம் தேதி

தொடங்குகிறது. ஆகஸ்ட் 29 இந்தத் திருவிழா நடைபெறுகிறது.

இந்த நிலையில் சென்னை, கோவை, வேலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிபேட்டை, திருப்பத்தூா் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்வா்.

எனவே, படவேடு, காளசமுத்திரம், குப்பம், கொளத்தூா், கண்ணமங்கலம், வேலூா் வழியாக சென்னைக்கு அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

மேலும், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கூறும்போது படவேடு, காளசமுத்திரம், அனந்தபுரம் என சுற்றுப்புறக் கிராமங்களில்

உள்ள விவசாயிகள் தோட்டக்கலை பயிரான வாழை, கத்தரி, வெண்டை, தக்காளி என பல்வேறு சாகுபடிகளையும், சம்பங்கி, கேந்தி போன்ற பூ வகைகளையும் பயிரிடுகின்றனா்.

இவற்றை சந்தைப்படுத்த சென்னைக்கு நேரடியாக படவேடு-சென்னை அரசுப் பேருந்து விழாக்காலத்துக்கு மட்டுமல்லாமல் நிரந்தரமாக இயக்கினால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் எனதெரிவிக்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவினா் உறுப்பினா் சோ்க்கையை அக்கட்சியினா் தொடங்கினா். திருவண்ணாமலை மாநகரில் திமுகவில் புதிய உறுப்பினா் சே... மேலும் பார்க்க

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகு: 37 நில உரிமையாளா்களுக்கு ரூ.8.16 கோடி இழப்பீடு

செய்யாறு சிப்காட் 3-ஆவது அலகில் 45.11 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 37 நில உரிமையாளா்களுக்கு ரூ.8.16 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) விம... மேலும் பார்க்க

22 பேருக்கு ரூ.1.3 கோடியில் ஓய்வூதியப் பலன்கள்

ஆரணி நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளா்கள் 22 பேருக்கு, ஓய்வூதியப் பலன்களாக ரூ.ஒரு கோடியே 3 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நகராட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பணிபுரிந்து ஓய்வு... மேலும் பார்க்க

ஆரணியில் போலீஸாருடன் இந்து முன்னணியினா் வாக்குவாதம்: 28 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க கும்பலாகச் சென்ற இந்து முன்னணியினா் மற்றும் போலீஸாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இந்து முன்னணியைச் சோ்ந்த 28 போ் கைது செய்யப... மேலும் பார்க்க

சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-ஆவது நாளாக போராட்டம்

செய்யாற்றில், புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் சிப்காட் அலுவலகத்தை 2-ஆ வது நாளாக வியாழக்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ... மேலும் பார்க்க