செய்திகள் :

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்பட்ட இந்திய குள்ளநரி - வனவிலங்கு நிபுணர்கள் சொல்வதென்ன?

post image

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இந்திய குள்ளநரியைக் கண்டுள்ளனர். இந்த இனத்தை சதுப்பு நிலத்தில் முதன் முதலில் பார்த்ததாகவும் தெரிவிக்கின்றனர். சென்னை மாவட்ட வன அதிகாரி வி.ஏ சரவணன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து வனவிலங்கு நிபுணர்கள் கூறுகையில்

" இதற்கு முன்பு சென்னையில் உள்ள தியோசாபிகல் சொசைட்டிக்குப் பின்னால் உள்ள தீவுகள், ப்ளூ கிராஸ் சாலை, பெசன்ட் நகர், கிண்டி தேசிய பூங்கா மற்றும் நன்மங்கலம் ரிசர்வ் காடு உள்ளிட்ட இடங்களில் நரிகளைப் பார்த்துள்ளனர். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இப்போது இந்த அரிய உயிரினங்களின் வாழ்விடமாக பட்டியலில் இணைகிறது.

நகர விரிவாக்கத்தின் காரணமாக பசுமையான இடங்கள் குறைந்து வருகின்றன. இந்த சமயத்தில் நரியைக் கண்டது நல்ல விஷயம். சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தையும் உயிரினங்களின் தொடர்பையும் இது எடுத்துரைக்கிறது" என்கின்றனர்.

பறவைகள் சரணாலயம்

சதுப்பு நிலத்தின் விலங்கினங்களை கண்காணித்து வரும் பாதுகாவலர் கே.வி.ஆர்.கே திருநாரணன் கூறுகையில்,

"நரியைக் கண்டது, பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு நேர்மறையான அறிகுறி. இங்கு நரிகள் காணப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணி, ஏராளமான உணவுகள் இங்கு இருப்பதுதான்.

சதுப்பு நிலத்தில் மீன்கள், நண்டுகள் என ஏராளமான இரைகள் உள்ளன. குறிப்பாக, நரிகள் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை விரும்பி உண்ணும்.

நரிகள் அவற்றை உண்ணும்போது மீனின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவும். இது சுற்றுச்சூழல் சமநிலைக்கு வழிவகுக்கும்" என்றார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவின் உயிரியலாளர் G காமராஜ் கூறுகையில் ”நரிகள் இதற்கு முன்பு வயல்வெளிகளில் காணப்பட்டன. அவை எலிகளை சாப்பிட்டு விவசாயிகளுக்கு உதவியாக இருந்தன.

எலிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகித்தன. இது விவசாயிகளுக்கு பயிர் சேதத்தை குறைக்கவும் உதவியாக இருந்தது” என்று அவர் கூறினார்.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நரி காணப்பட்டது பறவை ஆர்வலர்கள் மத்தியில் ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Thermal Imaging: இரவில் யானைகளைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்; வனத்துறை முடிவுக்குக் காரணம் என்ன?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம். மும்மாநிலங்களை இணைக்கும் முச்சந்திப்பு வனப்பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியில் யா... மேலும் பார்க்க

Survival: ஆண் தவளையுடன் இனச்சேர்க்கையைத் தவிர்க்கும் பெண் தவளைகள்; ஏன் தெரியுமா?

வாழ்வதற்காக இந்த பூமியில் இருக்கிற சின்னச்சின்ன உயிர்களும் செய்கிற தந்திரங்களைத் தெரிந்துகொண்டால் ஆச்சரியப்பட்டுப்போவோம். அந்தத் தந்திரங்களில் முக்கியமான ஒன்று இறந்ததுபோல நடிப்பது. அறிவியல் இதை தற்கால... மேலும் பார்க்க

Fire Fly: காற்றில் காதல் தூது; தூக்கணாங்குருவியின் காவலாளி; மின்மினிப்பூச்சிகளின் 'வாவ்' வாழ்வியல்!

சமீபத்தில் எப்போதாவது மின்மினிப் பூச்சியைப் பார்த்தீர்களா? பார்த்தீர்களென்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். பார்த்தாலே அதிர்ஷ்டம் செய்கிற அளவுக்கு என்னவாயிற்று மின்மினிகளுக்கு என்பவர்கள், இந்தக் கட்டுரையி... மேலும் பார்க்க

”ராஜ நாகம் என்பது ஓர் இனம் அல்ல..” - விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்த ஆச்சரிய தகவல்கள் என்ன?

ராஜ நாகம் என்பது ஓர் இனம் அல்ல என்று விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு European Journal of Taxonomy இதழில் வெளியிட்டதன் படி, ராஜநாகம் என்பது ஓர் இனம் அல்ல நான்கு தனித்தனி இனங்கள்... மேலும் பார்க்க

தனுஷ்கோடி: இலங்கை கடற்பகுதிகளில் மிதந்த ரசாயன துகள்கள்; மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கத் தடை

லைபீரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று கடந்த மே மாதம் 24-ம் தேதி கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் கடலில் மூழ்கியது.இதனால் இந்தக் கப்பலிலிருந்த கன்டெய்னர்கள் முழுதும் கடலில் மூழ்கின. இந்த கன்டெய்னர... மேலும் பார்க்க

சென்னை காசிமேடு: மீன்பிடி தடை காலம் முடிவு; மீன் பிடித்தலுக்குத் தயாராகும் மீனவர்கள் | Photo Album

மீன் பிடிJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசர... மேலும் பார்க்க