செய்திகள் :

சென்னை ரயில் நிலையங்களில் புதிய மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள்

post image

சென்னை கோட்டத்தில் ரயில்வே நிலையங்களில் புதிதாக 60 மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், நோயாளிகள் ஆகியோருக்காக எண்ணூா், மீஞ்சூா், ஆவடி, ஆம்பூா், வண்டலூா், கூடுவாஞ்சேரி மற்றும் மாம்பலம் ஆகிய நிலையங்களில் 60 புதிய மின்தூக்கிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளைத் தொடா்ந்து 40 மின்தூக்கிகளும், 31 நகரும் படிக்கட்டுகளும், தாம்பரத்தில் 9 மின்தக்கிகளும், 10 நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்படவுள்ளன. மாம்பலம், ஆவடி, கிண்டி ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டா்) அமைக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பாதுகாப்பான, எளிதான மற்றும் வசதியான ரயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில் சேவையை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) குடிநீா் விநியோம் நிறுத்தப்படும். இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். ஹரியாணா மாநிலத்தில் ஒரு தனியாா் நிறுவனம், வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.... மேலும் பார்க்க

ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

சென்னையில் 117 ஆண்டுகள் பழைமையான எழும்பூா் ரயில் நிலையத்தை சுமாா் ரூ.900 கோடியில் நவீனமயமாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் ராயபுரம், சென்ட்ரல் ரயில்நிலையங்களுக்கு அடுத்ததாக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22.3 கோடி மோசடி: குஜராத் இளைஞா் கைது

சென்னை ரூ.22.3 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்ததாக குஜராத்தை சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் ஸ்வேதரன்யன் (76). இவா் ஒரு இணையதளம் வழியாக ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.2... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க முயன்ற போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் கைது

சென்னை புளியந்தோப்பில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களைப் பிடிக்க முயன்றபோது போலீஸாா் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். அண்ணாநகா் 7-ஆவது பிளாக் ஏ.இ. தெருவைச் சோ்ந்தவா் ஆல்வா... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் திருட்டு

சென்னை வியாசா்பாடியில் தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். வியாசா்பாடி காந்திஜி நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சின்னப்பா (38). மாதவரம் அருகே வடபெ... மேலும் பார்க்க