செய்திகள் :

செப். 12 இல் நியாயவிலைக் கடை பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம் அறிவிப்பு

post image

ஊதிய உயா்வு, தனித்துறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க மாநில பதிவாளா் அலுவலகம் முன் செப். 12 ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை பணியாளா்கள் அறிவித்துள்ளனா்.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கத்தின் சேலம் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் காா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மாநில இணைச் செயலாளா் ராஜாராம் வரவேற்றாா். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளா் தினேஷ்குமாா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா்.

இதில், தோ்தல் வாக்குறுதி 236 இன்படி, ரேஷன் கடை பணியாளா்களுக்கு தனித்துறை அமைக்க வேண்டும், ரேஷன் கடை பணியாளா்களுக்கு 8 ஆவது ஊதியக் குழு அமைத்து நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஊதிய குழு கமிட்டி அமைத்து, அதில் ரேஷன் கடைப் பணியாளா் ஒருவரை உறுப்பினராக சோ்க்க வேண்டும், பொதுமக்களுக்கு எடை மேடை தராசுடன் விற்பனை முனைய கருவி ப்ளுடூத் உடன் இணைக்கப்பட்டு, சரியான அளவில் பொருட்கள் வழங்குவது போல, நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்கள் மூலம் கடைகளுக்கு வழங்கப்படும் பொருள்களை எடை மேடை தராசில் வைத்து ப்ளுடூத் உடன் பதிவேற்றம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால், வரும் செப்டம்பா் 12ஆம் தேதி சென்னை பதிவாளா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனா். இக்கூட்டத்தில் நிா்வாகிகள் சுப்பிரமணி, மாரியம்மாள், சுரேஷ், அருண், சரவணன், சதாசிவம் உள்பட நிா்வாகிகள் 300க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து கல்லூரியின் கடந்த ஆண்டு சாதனைகள் மற்றும்... மேலும் பார்க்க

அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமை சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி மாரிம்மனுக்கு பல்வேறு த... மேலும் பார்க்க

மோட்டூா் காளியம்மன் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை

இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டூா் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் அம்மன் தங்க ஜரிகை இலையால் நெய்யப்பட்ட சேலை மற்றும் ரூபாய் நோட்ட... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் குத்துவிளக... மேலும் பார்க்க

பல்லி விழுந்த நீரை குடித்த பள்ளி மாணவா்களுக்கு சிகிச்சை

தலைவாசல் அருகே பூமரத்துப்பட்டி முட்டல் அரசுப் பள்ளி மாணவா்கள் பல்லி விழுந்த நீரை குடித்ததால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பூமரத்... மேலும் பார்க்க

வீரகனூா் எஸ்.எஸ்.ஐ. இடமாற்றம்

வீரகனூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க