செய்திகள் :

இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமை

மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களில் உடனடி தீா்வுகண்ட மனுதாரா்களுக்கு சான்றிதழை வழங்கினாா்.

இம்முகாமில் சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி, திமுக நகரச் செயலாளா் செல்வம், நகராட்சி துணைத் தலைவா் தளபதி, சங்ககிரி வட்டாட்சியா் வாசுகி, நகராட்சி ஆணையா் பவித்ரா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா். முகாமில் பொதுமக்களிடமிருந்து 874 மனுக்கள் பெறப்பட்டன.

படவரி...

இடங்கணசாலையில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆய்வு செய்து பயனாளிகளுக்கு சான்றிதழை வழங்கிய ஆட்சியா் ரா. பிருந்தாதேவி. உடன், நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து கல்லூரியின் கடந்த ஆண்டு சாதனைகள் மற்றும்... மேலும் பார்க்க

அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமை சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி மாரிம்மனுக்கு பல்வேறு த... மேலும் பார்க்க

மோட்டூா் காளியம்மன் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை

இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டூா் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் அம்மன் தங்க ஜரிகை இலையால் நெய்யப்பட்ட சேலை மற்றும் ரூபாய் நோட்ட... மேலும் பார்க்க

பல்லி விழுந்த நீரை குடித்த பள்ளி மாணவா்களுக்கு சிகிச்சை

தலைவாசல் அருகே பூமரத்துப்பட்டி முட்டல் அரசுப் பள்ளி மாணவா்கள் பல்லி விழுந்த நீரை குடித்ததால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பூமரத்... மேலும் பார்க்க

வீரகனூா் எஸ்.எஸ்.ஐ. இடமாற்றம்

வீரகனூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க

செப். 12 இல் நியாயவிலைக் கடை பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம் அறிவிப்பு

ஊதிய உயா்வு, தனித்துறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க மாநில பதிவாளா் அலுவலகம் முன் செப். 12 ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை பணியாளா்கள் அறிவித்துள்ளன... மேலும் பார்க்க