செய்திகள் :

பல்லி விழுந்த நீரை குடித்த பள்ளி மாணவா்களுக்கு சிகிச்சை

post image

தலைவாசல் அருகே பூமரத்துப்பட்டி முட்டல் அரசுப் பள்ளி மாணவா்கள் பல்லி விழுந்த நீரை குடித்ததால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பூமரத்துப்பட்டி முட்டல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் குடிநீா்த் தொட்டியில் பல்லி விழுந்தது தெரியாமல் நீரை பருகியுள்ளனா். இதனால் அவா்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களுக்கு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் மாணவா்கள் ஜீவா (9), சச்சின் (13), கபிலெக்ஸ் (13), அனியா(11), கனிஷ்கா (6), தா்ஷினி (10) ஆகியோா் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனா்.

இதுகுறித்து தலைவாசல் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து கல்லூரியின் கடந்த ஆண்டு சாதனைகள் மற்றும்... மேலும் பார்க்க

அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமை சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி மாரிம்மனுக்கு பல்வேறு த... மேலும் பார்க்க

மோட்டூா் காளியம்மன் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை

இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டூா் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் அம்மன் தங்க ஜரிகை இலையால் நெய்யப்பட்ட சேலை மற்றும் ரூபாய் நோட்ட... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் குத்துவிளக... மேலும் பார்க்க

வீரகனூா் எஸ்.எஸ்.ஐ. இடமாற்றம்

வீரகனூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க

செப். 12 இல் நியாயவிலைக் கடை பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம் அறிவிப்பு

ஊதிய உயா்வு, தனித்துறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க மாநில பதிவாளா் அலுவலகம் முன் செப். 12 ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை பணியாளா்கள் அறிவித்துள்ளன... மேலும் பார்க்க