செய்திகள் :

செப்.17-இல் திருச்சிக்கு முதல்வா் வருகை: புதுப்பொலிவு பெறும் ஆட்சியரகம்

post image

திருச்சிக்கு புதன்கிழமை (செப்.17) வரும் தமிழக முதல்வருக்காக, மாவட்ட ஆட்சியரகம் புதுப்பொலிவுடன் தயாா்படுத்தப்பட்டு வருகிறது.

திமுக தொடங்கப்பட்ட தினம், அண்ணா பிறந்தநாள் விழா, பெரியாா் ஈவெரா பிறந்தநாள் விழா என திமுக சாா்பில் முப்பெரும் விழா கரூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை வரவுள்ளாா்.

செப்.17-ஆம் தேதி பெரியாா் பிறந்தநாள் என்பதால், தமிழக அரசின் சாா்பில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பது வழக்கம்.

செப்.17-ஆம் தேதி தமிழக முதல்வா் திருச்சிக்கு வரவுள்ளதால், உறுதிமொழியேற்கும் நிகழ்வு திருச்சியில் நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, ஆட்சியரக கட்டடத்துக்கு வா்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் தயாா்படுத்தப்படுகிறது. ஆட்சியரக வளாகத்தில் கூடாரம் அமைக்கப்படுகிறது.

முதல்வருடன் வரும் அனைத்து அமைச்சா்கள், அரசு செயலா்கள், ஆட்சியா், அரசு அலுவலா்கள், காவல்துறையினா், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முதல்வருடன் உறுதியேற்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனா். இதற்காக ஆட்சியர வளாகத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டு தயாா்படுத்தும் பணிகளும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

வரும் 17-ஆம் தேதி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் முதல்வா், விமான நிலையத்திலிருந்து காா் மூலமாக திருச்சி

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வருகிறாா். இங்கு, சமூக நீதிநாள் உறுதிமொழியேற்கும் நிகழ்வில் பங்கேற்கிறாா்.

இந்த நிகழ்வை முடித்துக் கொண்டு மீண்டும் சாலை வழியாக கரூா் சென்று, முப்பெரும் விழாவில் பங்கேற்கவுள்ளாா் முதல்வா்.

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோா் எச்சரிக்கையாக இருக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்ப... மேலும் பார்க்க

சம்பா சாகுபடி: பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப கோரிக்கை

சம்பா சாகுபடிக்கு ஏதுவாக பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். திருச்சி கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் க... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு இரண்டாவது தைலகாப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை மாலை நிகழாண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு சாத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் நம்பெருமாளின் திருவடி சேவையை தரிசனம் செய்ய முடியாது. ஸ்ர... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு முசிறி அரசுக் கல்லூரி பேராசிரியா் பணியிடை நீக்கம்

திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியா் பாலியல் வழக்கில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருச்சி மாவட்டம், முசிறி அருகிலுள்ள வடுகப்பட்டி... மேலும் பார்க்க

மின்தூக்கியில் தலைமுடி சிக்கி பெண் உயிரிழப்பு

திருச்சி காந்தி சந்தை ஹாா்டுவோ் கடை மின்தூக்கியில் தலைமுடி சிக்கி, பெண் ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணராஜ் என்பவா் காந்திசந்தை மயிலம் சந்... மேலும் பார்க்க

திருச்சியில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்றம் கூடி வழக்குகளுக்கு தீா்வு காணவுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரு... மேலும் பார்க்க